From Wikipedia, the free encyclopedia
மூவேந்தர் என்போர் சேர சோழ பாண்டியர். சங்க காலத்தில் தமிழகத்தை ஆண்ட சேர சோழ பாண்டியர்களின் பெயர்களைப் புறநானூற்றையும் [1] [2] பத்துப்பாட்டையும் தொகுத்தவர்களும், பதிற்றுப்பத்தைத் [3] தொகுத்துப் பதிகம் பாடியவரும் குறிப்பிடுகின்றனர். பாடல்களுக்குள்ளேயும் இவர்களின் பெயர்கள் வருகின்றன. அரசர்களின் பெயர்களில் உள்ள அடைமொழிகளை ஓரளவு பின் தள்ளி அகரவரிசையில் தொகுத்து வரலாற்றுக் குறிப்பு தரப்பட்டுள்ளது. இது வரலாற்றினை ஒப்புநோக்கி அறிய உதவியாக இருக்கும்
அரசன் பெயர் | அடையுடன் கூடிய பெயர் | தலைநகர் | பதிற்றுப்பத்தின் தலைவன் | சிறுகுறிப்பு |
---|---|---|---|---|
அந்துவஞ்சேரல் | சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறை | கருவூர் | - | சோழனை மதயானைப் பிடியிலிருந்து காப்பாற்றியவன் |
உதியஞ்சேரல் | சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன் | வஞ்சி | முதல் பதிற்றுப்பத்து தலைவன் எனக் கருதுவர் | ஐவர்-நூற்றுவர் போரிர் பெருஞ்சோறு அளித்தவன் |
கருங்கோ வாழியாதன் | செல்வக் கடுங்கோ வாழியாதன், சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன், சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக் கடுங்கோ வாழியாதன் | கருவூர் | ஏழாம் பத்து | பூழியர் பெருமகன், புகழூர்க் கல்வெட்டு |
குட்டுவன் (செங்குட்டுவன்) | சேரன் செங்குட்டுவன் , சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன், கடல்பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன் | வஞ்சி | ஐந்தாம் பத்து | கடற்போர் வெற்றி, கண்ணகிகுச் சிலை |
குட்டுவன் (பல்யானை) | பல்யானைச் செல்கெழு குட்டுவன் | வஞ்சி | மூன்றாம் பத்து | அகப்பா வெற்றி |
குட்டுவன் கோதை | - | வஞ்சி | - | வள்ளல் |
குடக்கோச் சேரல் | சேரமான் குடக்கோச் சேரல், குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை | கருவூர் | ஒன்பதாம் பத்து | கருவூரில் இருந்துகொண்டு குடநாட்டையும் ஆண்டவன் |
கோதை மார்பன் | - | தொண்டி | - | சோழன் பாண்டியன் வென்றதற்கு மகிழ்ந்தவன், வள்ளல் |
சேரல் (நார்முடி) | களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் | வஞ்சி | நான்காம் பத்து | பூழி நாட்டை வென்றான், நன்ன்னை வென்றான் |
சேரலாதன் (ஆடுகோள்) | ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் | தொண்டி | ஆறாம் பத்து | மழவரை வென்றான் |
நெடுஞ்சேரலாதன் (இமயவரம்பன்) | இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் | வஞ்சி | இரண்டாம் பத்து | ஆரியரை வணக்கினான், யவனரைப் பிணித்தான் |
நெடுஞ்சேரலாதன் (குடக்கோ) | சேரமான் குடக்க்கோ நெடுஞ்சேரலாதன் | வஞ்சி | - | சோழனோடு போரிட்டபோது இருவரும் மாண்டனர் |
பெருங்கடுங்கோ | பாலை பாடிய பெருங்கடுங்கோ | கருவூர் | - | அரசன், புலவன் |
பெருஞ்சேரல் இரும்பொறை | சேரமான் கருவூர் எறிய ஒள்வாள் கோப் பெருஞ்சேரல் இரும்பொறை | கருவூர் | எட்டாம் பத்து | தகடூர் யாத்திரை நூலின் தலைவன், புலவர்க்குக் கவரி வீசியவன் |
பெருஞ்சேரலாதன் | சேரமான் பெருஞ்சேரலாதன் | வஞ்சி | - | கரிகாலனோடு வெண்ணியில் போர், வடக்கிருத்தல் |
மாந்தரஞ்சேரல் | சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை, சேரமான் யானைக்கண் சேய் மாந்தஞ்சேரல் இரும்பொறை, கோச் சேரமான் யானைக்கண் சேய் மாந்தஞ்சேரல் இரும்பொறை | கருவூர் | பத்தாம் பத்தின் தலைவன் எனக் கருதப்படுகிறான் | கொல்லிநாட்டை வென்றான், சோழனிடம் தோற்றான், தொண்டிப் புரட்சியை அடக்கினான் |
மாரி வெண்கோ | - | வஞ்சி | - | மூவேந்தர் நட்பு |
வஞ்சன் | சேரமான் வஞ்சன் | பாயல் நாடு | - | வள்ளல் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.