கோலாகங்சார்
From Wikipedia, the free encyclopedia
கோலாகங்சார் (மலாய்: Kuala Kangsar; சீனம்: 瓜拉江沙) மலேசியா பேராக் மாநிலத்தில் உள்ள அரச நகரம். இங்கேதான் மலேசியாவின் முதல் ரப்பர் மரக் கன்று நடப்பட்டது. பிரித்தானிய தாவரவியலாளர் எச். என். ரிட்லி முதல் ரப்பர் கன்றை நட்டு உலக ரப்பர் ஏற்றுமதியில் மலேசியாவை முதல் நிலைக்கு கொண்டு வந்தார். இந்த நகரத்தின் மக்கள் தொகை 39,331.[1]
விரைவான உண்மைகள் கோலாகங்சார் Kuala Kangsar பேராக், நாடு ...
குறிக்கோளுரை: தரமான வாழ்க்கை வளர்ப்போம் | |
ஆள்கூறுகள்: 4°46′N 100°56′E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | பேராக் |
மாவட்டம் | கோலாகங்சார் |
பரப்பளவு | |
• மொத்தம் | 204.94 km2 (79.13 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 39,331 |
• அடர்த்தி | 752/km2 (1,950/sq mi) |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 31050 |
தொலைபேசி எண் | +605-77x |
போக்குவரத்துப் பதிவெண்கள் | C |
இணையதளம் | www.mpkkpk.gov.my |
மூடு
கோலாகங்சார் நகரம் கங்சார் நதிக் கரையோரம் உருவாக்கப் பட்டது. இந்த ஆறு பேராக் ஆற்றுடன் கலக்கிறது. 1877–1887 ஆண்டுகளில் பேராக் மாநிலத்தை ஆட்சி செய்தவர் சுல்தான் யூசுப் சரிபுடின் முசபர் ஷா. இந்தச் சுல்தான் தான் கோலாகங்சார் அரச நகரத்தை உருவாக்கினார்.