கோயம்புத்தூர் பண்பாடு
கொங்கு நாட்டு கலாச்சாரம் / From Wikipedia, the free encyclopedia
கோயம்புத்தூர் பண்பாடு (Culture of Coimbatore) என்பது "தென்னிந்தியாவின் மன்செஸ்டர்" என்று பிரபலமாக அழைக்கப்படும் கோயம்புத்தூர் மக்களின் கலை, பண்பாட்டைக் குறிப்பதாகும். இது தமிழ்நாட்டின் மேற்குப் பகுதியான கொங்கு நாட்டுப் பகுதியின் கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்தியாவில் உள்ள மற்ற நகரங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டது இந்த கலாச்சாரம். ஒரு பலப்பட்டறையர் சேர் நகரமாக இருப்பதால், நகரத்தின் கலாச்சாரம் இதன் பல்வேறு மக்கள்தொகையின் பழக்கவழக்கங்களைப் பிரதிபலிக்கிறது. இது ஒரு தனித்துவமான கலவையைத் தோற்றுவித்துள்ளது. பொதுவாகப் பாரம்பரிய நகரமாகக் கருதப்பட்டாலும், கோயம்புத்தூர் தமிழ்நாட்டின் மற்ற நகரங்களைக் காட்டிலும் பன்முகத்தன்மை வாய்ந்தது. தமிழ்நாட்டின் பாரம்பரிய இசை, நடனம் மற்றும் அனைத்து கலை வடிவங்களும் நகரத்தில் மிகவும் பிரபலமாக உள்ளன. பாரம்பரிய உணவுகள் முதல் துரித உணவுகள் வரை, பண்டைய கோயில் கட்டிடக்கலை முதல் நவீன உயரமான கட்டிடங்கள் வரை மற்றும் பாரம்பரிய இசை மற்றும் நடனம் முதல் நகரத்தில் வளர்ந்து வரும் இரவு வாழ்க்கை வரை ஒரு தனித்துவமான கலாச்சார கலவையைக் கோயம்புத்தூரில் காணலாம். கோயம்புத்தூர் மக்கள் தொழில்முனைவோருக்காகப் பெயர் பெற்றவர்கள்.[1][2]