![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/40/Reichsadler_Deutsches_Reich_%25281935%25E2%2580%25931945%2529.svg/langta-640px-Reichsadler_Deutsches_Reich_%25281935%25E2%2580%25931945%2529.svg.png&w=640&q=50)
கெஷ்டாபோ
From Wikipedia, the free encyclopedia
கெசுட்டாப்போ அல்லது கெஷ்டாபோ அல்லது கெஸ்டாபோ (Gestapo /ɡəˈstɑːpoʊ/ gə-STAH-poh, இடாய்ச்சு: [ɡəˈʃtaːpo] ( கேட்க)),[3] என்பது இடாய்ச்சு மொழியில் கெஹைம ஷ்டாட்பொலிட்சை (Geheime Staatspolizei (டாய்ச்சு ஒலிப்பு: [ɡəˈhaɪmə ˈʃtaːtspoliˌtsaɪ] (
கேட்க); மொ.பெ. "Secret State Police", (மறைநிலை தேசிய காவல்துறை) எனப்படும் நாட்சி ஜெர்மனி மற்றும் ஜெர்மன் ஆளுகைக்குட்பட்ட ஐரோப்பாவின் அலுவல்முறை மறைநிலை காவல்துறையின் சுருக்கமான பெயராகும்.
Geheime Staatspolizei | |
![]() | |
![]() 8 இளவரசர் ஆல்ப்ரெக்ட் தெருவில் இருந்த கெஷ்டாப்போவின் தலைமையகம்(1933) | |
துறை மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | 26 ஏப்ரல் 1933; 91 ஆண்டுகள் முன்னர் (1933-04-26) |
முன்னிருந்த அமைப்பு |
|
கலைப்பு | 8 மே 1945; 79 ஆண்டுகள் முன்னர் (1945-05-08) |
வகை | மறைநிலை காவல்துறை |
ஆட்சி எல்லை | ஜெர்மனி மற்றும் ஜெர்மானிய ஆளுகைக்குட்பட்ட ஐரோப்பு |
தலைமையகம் | 8 இளவரசர் ஆல்ப்ரெக்ட் தெரு, பெர்லின் 52°30′25″N 13°22′58″E |
பணியாட்கள் | 32,000 (1944 மதிப்பீடு.)[1] |
பொறுப்பான அமைச்சர்கள் |
|
அமைப்பு தலைமைகள் |
|
மூல அமைப்பு |
|
இந்தப் படையை எர்மன் கோரிங் 1933-ஆம் ஆண்டு புருஷ்யாவின் பல அரசியல் காவல் முகமைகளை ஒன்றிணைத்து ஒரு அமைப்பாக உருவாக்கினார். 20 ஏப்ரல் 1934-இல் கெஷ்டாபோவின் மேற்பார்வை ஷுட்ஸ்டோஃவல்லின் தலைவரான ஹைன்ரிக் ஹிம்லரிடம் கொடுக்கப்பட்டது. அவரை 1936-ஆம் ஆண்டு ஹிட்லர் ஜெர்மன் காவல்துறையின் தலைவராக நியமித்தார். புருஷ்யாவுக்கு மட்டுமேயான முகமையாக இருப்பதற்கு மாறாக, ஜெர்மானிய பாதுகாப்புக் காவல்துறையின் துணை அலுவலகமாக, தேசிய முகமையாக, கெஷ்டாபோ ஆனது. 27 செப்டம்பர் 1939-இல் இருந்து இது அரசு பாதுகாப்புக்கான முதன்மை அலுவலகத்தால் மேலாண்மை செய்யப்பட்டது, துறை-4 என்று அறியப்பட்டு ஜெர்மானிய பாதுகாப்புச் சேவையின் இணை அமைப்பாகக் கருதப்பட்டது.
அது இயங்கிவந்த காலத்தில், கெஷ்டாபோ பரவலாக அட்டூழியங்களைச் செய்தது. கெஷ்டாபோவின் ஆற்றல் அரசியல் எதிர்ப்பாளர்கள், கருத்தியல் மறுப்பாளர்கள் (சமயவாதிகள், மதகுருக்கள்), தொழில்முறைக் குற்றவாளிகள், சின்டி மற்றும் ரோமா மக்கள், ஊனமுற்றவர்கள், தற்பாலீர்ப்பு கொண்டவர்கள் எல்லாவற்றுக்கும் மேலாக யூதர்கள் போன்றார்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டது.[4] கெஷ்டாபோவால் கைது செய்யப்பட்டவர்கள் பெரும்பாலும் நீதிமன்றச் செயன்முறையின்றி பிடித்து வைக்கப்பட்டனர், ஜெர்மனி முழுவதும், இரவும் பனியும் ஆணை மூலம் 1941 முதல் ஜெர்மானிய ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளிலும் கெஷ்டாபோவின் சிறைகாவலிலிருந்த அரசியல் கைதிகள் வெறுமனே காணாமல் போகச் செய்யப்பட்டனர்.[5]
பரவலான புரிதலுக்கு மாறாக, கெஷ்டாபோ உண்மையில் வரையறுக்கப்பட்ட கண்காணிப்புத் திறனுள்ள, ஒப்புமையளவில் ஒரு சிறிய அமைப்பாகும். இருப்பினும் ஜெர்மானியப் மக்கள் தங்கள் உடனுறை குடிமக்களைப் பற்றிய உளவுத்தகவல்களைத் தரவிரும்பியமையின் காரணமாக கெஷ்டாபோ மிகவும் செயல்திறமை மிக்கதாகத் திகழ்ந்தது. இரண்டாம் உலகப் போரின் போது ஹோலோகௌஸ்டிற்கு கெஷ்டாபோவின் பங்கு இன்றியமையாதது. போர் முடிந்தபின் பன்னாட்டுப் படைத்துறைத் தீர்ப்பாயம் நியூர்ன்பெர்க் வழக்காய்வுகளில் கெஷ்டாபோவை ஒரு குற்ற அமைப்பாக அறிவித்தது, கெஷ்டாபோவின் பல தலைமை உறுப்பினர்களுக்கு மரணதண்டனை விதித்தது.