கூர்க் மாநிலம்
From Wikipedia, the free encyclopedia
கூர்க் மாநிலம் (Coorg State) என்பது 1950 முதல் 1956 வரை இந்தியாவின் சி பிரிவு மாநிலமாக இருந்தது ஆகும். [1] 1950 சனவரி 26 அன்று இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தபோது, அப்போதிருந்த பெரும்பாலான மாகாணங்கள் மாநிலங்களாக மாற்றப்பட்டன. இதனால், கூர்க் மாகாணம் கூர்க் மாநிலமாக மாற்றப்பட்டது. கூர்க் மாநிலத்தை அதன் தலைநகரான மடிக்கேரியிலிருந்து தலைமை ஆணையரால் ஆளப்பட்டது. அரசாங்கத்தின் தலைவராக முதலமைச்சர் இருந்தார். 1956 மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி கூர்க் மாநிலம் 1956 நவம்பர் முதல் நாள் அன்று ஒழிக்கப்பட்டு மைசூர் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது (பின்னர் 1973 இல் கருநாடகம் என மறுபெயரிடப்பட்டது) [2] தற்போது, கூர்க் மாநிலப் பகுதிகள் கர்நாடக மாநிலத்தின் ஒரு மாவட்டமாக உள்ளது.
விரைவான உண்மைகள்
கூர்க் மாநிலம் | |||||
இந்திய மாநிலம் | |||||
| |||||
இந்தியாவில் கூர்கின் அமைவிடம் | |||||
முதலமைச்சர் | |||||
• | 1950-1956 | சி. எம். பொன்னச்சா | |||
வரலாறு | |||||
• | கூர்க் மாகாணத்தில் இருந்து கூர் மாநிலம் உருவாக்கப்பட்டது | 26 சனவரி 1947 | |||
• | மைசூர் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது | 1 நவம்பர் 1956 | |||
States of India since 1947 |
மூடு