கூடுதுறை
From Wikipedia, the free encyclopedia
கூடுதுறை (Kooduthurai), அல்லது முக்கூடல் (Mukkoodal)இந்தியாவில் தமிழ்நாட்டில் ஈரோட்டிற்கு அருகில் பவானி என்ற இடத்தில் அமைந்துள்ள புனிதமான இடமாகும்.
இந்த இடமானது காவிரி ஆறு, பவானி ஆறு மற்றும் மாயநிலையிலான அமுதா ஆறு ஆகிய ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது.[1] கூடுதுறையின் கரையில் பவானி சங்கமேசுவரர் கோயில் அமைந்துள்ளது.[2] இந்த ஆற்றின் பெயரானது தமிழில் 'கூடு' என்ற சொல்லிலிருந்தும் (பொருள்: இணைதல்) 'துறை' என்ற சொல்லிலிருந்தும் (பொருள்: ஆற்றுப்படுகை) உருவாகியுள்ளது.