குர்பக்ஷ் சிங் தில்லான்
From Wikipedia, the free encyclopedia
குர்பாக் சிங் தில்லான் (Gurbaksh Singh Dhillon) (18 மார்ச் 1914 - 6 பிப்ரவரி 2006) இவர் இந்திய தேசிய இராணுவத்தில் ஓர் அதிகாரியாக இருந்தார். இவர் "மாட்சிமை தாங்கிய பிரித்தானியப் பேரரசருக்கு எதிராக போர் தொடுத்தார்" என்று குற்றம் சாட்டப்பட்டார். ஜெனரல் ஷா நவாஸ் கான் மற்றும் பிரேம் குமார் சாகல் ஆகியோருடன், 1945 நவம்பர் 5 ஆம் தேதி செங்கோட்டையில் தொடங்கிய ஐ.என்.ஏ விசாணைகளில் இரண்டாம் உலகப் போரின் முடிவில் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இந்திய சுதந்திர பேச்சுவார்த்தைகளில் இவரும் முக்கிய பங்கு வகித்தார்.
விரைவான உண்மைகள் குர்பக்ஷ் சிங் தில்லான், பிறப்பு ...
குர்பக்ஷ் சிங் தில்லான் | |
---|---|
1940இல் குர்பக்ஷ் சிங் தில்லான்s | |
பிறப்பு | (1914-03-18)18 மார்ச்சு 1914 Algon, பஞ்சாப், பிரித்தானிய இந்தியா (தற்போதைய தரண் தரண் மாவட்டம், பஞ்சாப், இந்தியா) |
இறப்பு | 6 பெப்ரவரி 2006(2006-02-06) (அகவை 91) குவாலியர், மத்தியப் பிரதேசம், இந்தியா |
சார்பு | பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் (1940 – 1942) நாடு கடந்த இந்திய அரசு (1942 – 1945) |
போர்கள்/யுத்தங்கள் | மலேயப் போர் |
மூடு