குபேரன்
From Wikipedia, the free encyclopedia
இந்து தொன்மவியலின் அடிப்படையில் குபேரன் செல்வத்தின் அதிபதியாவார். விஸ்ரவன் மற்றும் ரிஷி குமாரி இலவித தேவிக்கும் பிறந்தவர். இவருக்கு ராவணன், கும்பகர்ணன், விபீஷணன் என்ற ஒன்று விட்ட சகோதர்களும், சூர்ப்பனகை என்ற சகோதரியும் இருந்தனர். இவருக்கு சித்திரலேகா என்ற மனைவியும், இத்தம்பதிகளுக்கு நளகூபன், மணிக்ரீவன் என்று இரண்டு மகன்களும் உள்ளனர்.
குபேரன் | |
---|---|
சான் அண்டொனியோ கலை அருங்காட்சியகத்தில் குபேரன் சிலை | |
அதிபதி | செல்வத்தின் அதிபதி, வடதிசையின் கடவுள் |
வகை | தேவன், லோகபாலன் (திக்பாலன்) |
இடம் | அலாகா |
மந்திரம் | ஓம் கம் குபேராய நமக. |
ஆயுதம் | கதை |
துணை | யட்சி |
சிவபக்தனான குபேரன் தன்னுடைய சிவ வழிபாட்டால் வடதிசைக்கு அதிபதியானார். அதன் காரணமாக எண்திசை பாலகர்களில் ஒருவர் என்று அழைக்கப்படுகிறார். சிவபக்தியின் காரணமாக சிவபெருமான் சுவர்ண பைரவராக குபேரனுக்கு செல்வத்தினை நிர்வகிக்கும் பொறுப்பினைத் தந்தார். [1]
திருப்பதி ஏழுமலையானுக்கு குபேரன் கடன் கொடுத்ததாக கதையுண்டு. குபேர வழிபாடு செல்வத்தினை பெருக்கும் என்பது இந்து மக்களின் நம்பிக்கை. மேலும் குபேர இயந்திரம், குபேர யாகம் போன்றவையும் செல்வத்தினை பெருக்கும் என மக்கள் நம்புகின்றார்கள்.
புத்த மதத்திலும் குபேரன் உண்டு. அங்கு இவரை வைஸ்ரவணா என்று வழிபடுகிறார்கள். ஜைன மதத்தில் குபேரனை சர்வானுபூதி என்று வழிபடுகின்றனர்.