நளகூபன்
From Wikipedia, the free encyclopedia
நளகூபன் குபேரனின் மைந்தன் ஆவார். இவருக்கு மணிக்ரீவன் என்ற சகோதரனும் உண்டு. நாரத முனிவரின் சாபத்தினால் கோகுலத்தில் மருதமரமாக இவர்கள் நின்றார்கள். கிருஷ்ண அவதாரத்தில் விஷ்ணு இவர்களுக்கு மோட்சம் வழங்கியதாக பெரியாழ்வார் குறிப்பிடுகிறார்.