காலங்கா போர் நினைவுச்சின்னம்
இந்தியாவின் தேராதூனில் உள்ள பாரம்பரிய நினைவுச் சின்னம் / From Wikipedia, the free encyclopedia
காலங்கா போர் நினைவுச்சின்னம் (Khalanga War Memorial) இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தின் தலைநகரமான தேராதூனில் அமைந்துள்ள ஒரு பாரம்பரிய நினைவுச்சின்னமாகும். 1814 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆங்கிலோ-நேபாளப் போரின் முதல் போராகக் கருதப்படும் நல்பானி போரில் ஆங்கிலேயர்களுடன் போராடிய கோர்கா வீரர்களின் நினைவாக இந்நினைவிடம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.[1] போர் வரலாற்றில் எதிரிகளுக்காக இராணுவத்தால் கட்டப்பட்ட உலகின் ஒரே நினைவுச்சின்னம் காலங்கா போர் நினைவுச்சின்னம் என்று விவரிக்கப்படுகிறது. ஏனெனில் ஆங்கிலேயர்கள் கோர்காக்களின் வீரத்தைக் கண்டு அப்போரால் ஈர்க்கப்பட்டனர். கோர்காக்களின் தைரியத்திற்கு அஞ்சலி செலுத்தும் அடையாளமாக, தாக்குதல் நடத்திய பிரித்தானியப் படைகளுக்கு பொறுப்பான படைத்தலைவர் உரோலோ கில்லெப்பி மற்றும் கேப்டன் பல்பத்ரா குன்வார் ஆகியோரின் நினைவாக இந்த நினைவுச்சின்னம் கட்டப்பட்டுள்ளது.
காலங்கா போர் நினைவுச் சின்னம் Khalanga War Memorial | |
---|---|
அமைவிடம் | தேராதூன் |
ஆள்கூற்றுகள் | 30.343141°N 78.098147°E / 30.343141; 78.098147 |
பரப்பளவு | திப்பனாலா பானி,சகாசுத்திராதாரா சாலை |
கட்டப்பட்டது | 1814 |
நிர்வகிக்கும் அமைப்பு | இந்தியத் தொல்லியல் ஆய்வகம் |
இந்த அமைப்பு இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் கட்டுப்பாட்டுக்குள் பராமரிக்கப்படுகிறது.[2] ஒவ்வோர் ஆண்டும் படையினரை நினைவுகூருவதற்கும், கோர்காக்களின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றைக் கொண்டாடுவதற்கும் இங்கு ஒரு கண்காட்சி நடைபெறுகிறது.[3][4]