கார்கில் போர்
இந்திய- பாக்கித்தானியப் போர் / From Wikipedia, the free encyclopedia
கார்கில் போர் (ஆங்கிலம்: Kargil War) அல்லது கார்கில் பிரச்சனை, 1999இல் மே முதல் ஜூலை வரை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில், நடந்த போராகும். இந்த போர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கார்கில் நகரின் அருகில் உள்ள டைகர் மலையில் நடந்தது. கார்கிலை மீட்க இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையான விஜய் நடவடிக்கை என்ற பெயரிலும் இது வழங்கப்படுகிறது.[16]
கார்கில் போர் Kargil War |
|||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
இந்திய-பாகிஸ்தான் போர்கள் பகுதி | |||||||||
|
|||||||||
பிரிவினர் | |||||||||
இந்தியா | பாக்கித்தான், காஷ்மீரி போராளிகள் |
||||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||||
சனாதிபதி கே ஆர் நாராயணன் | சனாதிபதி ரபீக் தரர் | ||||||||
பலம் | |||||||||
30,000 | 5,000 | ||||||||
இழப்புகள் | |||||||||
இந்தியாவின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரம்: 527 பலி[3][4][5] 1,363 படுகாயம்[6] 1 போர் கைதி 1 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது போர் விமானம் விழுந்து நொறுங்கியது 1 உலங்கு வானூர்தி சுட்டு வீழ்த்தப்பட்டது பாகிஸ்தான் இராணுவ கூற்றுகள்: 1600[7] | பாகிஸ்தான் இராணுவ கூற்றுகள்: 357-4000 பலி[8][9][10] (பாகிஸ்தான் இராணுவ வீரர்கள்) 665+ இராணுவ வீரர்கள் படுகாயம்[11] 8 போர் கைதிகள் [12] இந்திய அதிகாரப்பூர்வ கூற்றுகள்: 700 பலி [13][14][15] |
மே 1999இல் பாகிஸ்தான் இராணுவமும், காஷ்மீரி போராளிகளும் பாகிஸ்தானிலிருந்து கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி இந்தியாவிற்குள் நுழைந்ததே போருக்கு முக்கிய காரணமாகும்.[17] போரின் ஆரம்பத்தில் பாகிஸ்தான், பழியை முற்றிலுமாக காஷ்மீரி போராளிகள் மீது சுமத்தியது. ஆனால், உயிரிழந்த வீரர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலமாகவும், போருக்குப்பின் பாகிஸ்தான் பிரதமர் மற்றும் பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஆகியோர் விடுத்த அறிக்கைகள்[18][19][20] மூலமாகவும், பாகிஸ்தான் துணை இராணுவப் படையினர், தளபதி அஷ்ரஃப் ரஷீத் தலைமையில்[21] போரில் ஈடுபட்டிருந்தது உறுதியானது. இந்திய வான்படையின் துணையோடு, இந்தியத் தரைப்படை, பாகிஸ்தான் இராணுவம் மற்றும் போரளிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட இந்தியப் பகுதிகளை மீட்டது. சர்வதேச நாடுகள் பாகிஸ்தானின் செயலுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், பாகிஸ்தான் படைகள் இந்தியாவுடனான போரைக் கைவிட்டன.
இப்போரானது, மிக உயர்ந்த மலைத்தொடரில் மிகுந்த சவால்களை எதிர்கொண்டு நடந்த போருக்கு சிறந்த உதாரணமாகும். இதுவரை இந்த போர் மட்டுமே, அணு ஆயுத சக்தியுடைய நாடுகள் இரண்டுக்கிடையில் நடந்த நேரடிப் போராகும். இந்தியா முதன்முறையாக 1974 இல் வெற்றிகரமாக அணு ஆயுதச் சோதனை நிகழ்த்தியது. பாகிஸ்தானும் இரகசியமாக அணு ஆயுத ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தாலும், 1998 ஆம் ஆண்டு இந்தியா நிகழ்த்திய இரண்டாவது அணு ஆயுதச் சோதனைக்குப் பிறகு இரண்டு வாரங்கள் கழித்தே பாகிஸ்தான் தனது முதல் அணு ஆயுதச் சோதனையை நிகழ்த்தியது.