காந்தி அமைதிப் பரிசு
காந்தியவாதி / From Wikipedia, the free encyclopedia
பன்னாட்டு காந்தி அமைதிப் பரிசு (International Gandhi Peace Prize) மகாத்மா காந்தியின் நினைவாக பெயரிடப்பட்டுள்ள இந்த பரிசு இந்திய அரசினால் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
பன்னாட்டு காந்தி அமைதிப் பரிசு | |
---|---|
![]() பன்னாட்டு காந்தி அமைதிப் பரிசின் சின்னம் | |
விருது வழங்குவதற்கான காரணம் | அகிம்சை மற்றும் பிற காந்திய முறைகள் மூலம் கல்வி, சமூக, பொருளாதாரம் மற்றும் அரசியல் மாற்றத்திற்கான பங்களிப்புகள் |
இதை வழங்குவோர் | இந்திய அரசு |
வழங்குபவர் | இந்திய அரசு ![]() |
வெகுமதி(கள்) | ₹ 1 கோடி (10 மில்லியன்) |
முதலில் வழங்கப்பட்டது | 1995 |
கடைசியாக வழங்கப்பட்டது | 2021 |
Highlights | |
மொத்தம் வழங்கப்பட்டவை | 20 |
முதலில் வாங்கியவர் | ஜூலியஸ் நைரேரே |
கடைசியாக வாங்கியவர் | கீதா பிரஸ் |
அமைதியை விரும்பிய காந்தியின் கொள்கைகளை பரப்பும் எண்ணத்துடன் இந்திய அரசு 1995 ஆம் ஆண்டு, காந்தியின் 125 ஆவது பிறந்தநாளை ஒட்டி, இந்த பன்னாட்டு காந்தி அமைதிப்பரிசை உருவாக்கியது. ஆண்டுதோறும் வழங்கப்படும் இப்பரிசு சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்களை அகிம்சை மற்றும் காந்தியக் கொள்கைகள் மூலம் உருவாக்க பங்கெடுக்கும் தனிநபர் அல்லது நிறுவனத்திற்கு வழங்கப்படுகிறது. இவ்விருது எந்த உலகநாணயத்திற்கும் மாற்றக்கூடிய இந்திய ரூபாய் 10 மில்லியன், ஒரு கோப்பை மற்றும் ஒரு சான்றிதழ் கொண்டது.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியப் பிரதமர், மக்களவை எதிர்கட்சி தலைவர், இந்திய தலைமை நீதிபதி மற்றும் இரு சிறப்பு உறுப்பினர்கள் கொண்ட குழு இந்த பரிசுக்குரியவர்களைத் தேர்ந்தெடுக்கின்றது.