கல்லணை
இந்தியாவில் உள்ள ஒரு அணை. / From Wikipedia, the free encyclopedia
கல்லணை (Kallanai, ஆங்கில மொழி: Grand Anicut) இந்தியாவின், தமிழ்நாட்டில் உள்ள உலக பழமை வாய்ந்த அணையாகும். இந்த அணை கரிகால் சோழனால் பொ.ஊ. முதலாம் நூற்றாண்டில் காவிரி மீது கட்டப்பட்டுள்ளது. இது திருச்சிக்கு மிக அருகில் உள்ளது. இந்த அணை தஞ்சாவூர் மாவட்டத்தில், பூதலூர் வட்டத்தில் உள்ள கல்லணை - தோகூர் கிராமத்தில் அமைந்துள்ளது. திருச்சியில் அகண்ட காவேரி என அறியப்படும் காவிரி ஆறு முக்கொம்பில் வடபுறமாக கொள்ளிடம், தென்புறமாக காவிரி என இரண்டாகப் பிரிகிறது. இவ்விடத்தில் ஆங்கிலேயர் ஆட்சியில் மேலணை கட்டப்பட்டுள்ளது. காவிரிக்கும், கொள்ளிடத்துக்கும் இடையில் திருவரங்கம் ஆற்றுத்தீவு உள்ளது. அங்கிருந்து காவிரி ஆறு கிளை கல்லணையை வந்தடைகிறது. அங்கு காவிரி ஆறானது உள்ளாறு (கொள்ளிடம்), காவிரி, வெண்ணாறு, புது ஆறு என 4 ஆகப் பிரிகிறது. உள்ளாறு (கொள்ளிடம்) மீண்டும் கொள்ளிடத்தில் இணைகிறது. காவிரி இவ்வாறு பிரியுமிடத்தில்தான் கல்லணை கட்டப்பட்டுள்ளது.
கல்லணை Kallanai | |
---|---|
கல்லணையின் தற்போதையத் தோற்றம் | |
நாடு | இந்தியா |
அமைவிடம் | திருச்சிராப்பள்ளியில் இருந்து 15 கி.மீ, தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு |
நோக்கம் | நீர்ப்பாசனம் |
நிலை | செயல்படுகிறது |
திறந்தது | 1 ஆம் நூற்றாண்டு[1][2][3] |
கட்டியவர் | கரிகால் சோழன் |
இயக்குனர்(கள்) | தமிழ்நாடு அரசு |
அணையும் வழிகாலும் | |
வகை | நீர்த்தேக்கம் |
தடுக்கப்படும் ஆறு | ஆறு |
உயரம் (அடித்தளம்) | 5.4 மீட்டர்கள் (18 அடி) |
நீளம் | 329 மீட்டர்கள் (1,079 அடி) |
அகலம் (அடித்தளம்) | 20 மீட்டர்கள் (66 அடி) |
பாசன காலங்களில் காவிரி, வெண்ணாறு, புது ஆறு ஆகியவற்றிலும், வெள்ளக் காலங்களில் கொள்ளிடத்திலும் தண்ணீர் கல்லணையில் இருந்து திறந்துவிடப்படும். அதாவது வெள்ள காலங்களில் கல்லணைக்கு வரும் நீர் காவிரிக்கு இடது புறம் ஓடும் கொள்ளிடம் ஆற்றில் (முக்கொம்பில் காவிரியில் இருந்து பிரிந்த கிளை ஆறு) திருப்பி விடப்படும். எனவே தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டத்தின் பல இலட்சம் ஏக்கர் நிலம் வெள்ளத்தில் இருந்து காப்பற்றப்படுகிறது.