கயவாய்
ஆறானது கடலுடன் கலக்கும் பகுதி. நன்னீரும், உப்பு நீரும் கலக்கும் இடம் / From Wikipedia, the free encyclopedia
கயவாய் (ஒலிப்புⓘ) அல்லது கழிமுகம்(த.வ) அகன்ற கழிமுகம் என்பது, பகுதி மூடியதும், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆறுகள் அல்லது சிற்றாறுகள் கலப்பதும், கடலுடன் தொடர்புடையதுமான, கரையோரக் காயல் நீர்ப்பரப்பு ஆகும். கயவாய்கள் உயர்ந்த வீதமான உயிரியல் உற்பத்தித்திறன் கொண்டவையாக உள்ளன. கயவாய்கள் பொதுவாக ஆறுகளின் கழிமுகங்களாக உள்ளதுடன், நிலப்பகுதி நீரோட்டத்தினால் அல்லது கரைக்கு அப்பாலிருந்து வரும் படிவு, வண்டல் ஆகியவை இங்கே காணப்படுகின்றன. கயவாய்கள் உப்புநீரால் ஆனவை.
கயவாய்கள், மனிதச் செயற்பாடுகளினால் ஆபத்துக்கு உள்ளாகியுள்ளன. இவை ஆற்றெதிர்ப் புறத்திலும் (upstream), கடலிலும் நிகழும் நடவடிக்கைகளினால் பாதிக்கப்படுவதுடன், மாசுகளும், படிவுகளும் கயவாய்களில் செறிகின்றன.[1][2][3]