கம்பாலகொண்டா வனவிலங்கு சரணாலயம்
From Wikipedia, the free encyclopedia
கம்பாலகொண்டா வனவிலங்கு சரணாலயம் (Kambalakonda Wildlife Sanctuary) விசாகப்பட்டினத்திற்கு அருகில் அமைந்துள்ள ஒரு வனப்பகுதியாகும். இது மார்ச் 10, 1970 முதல் ஆந்திர மாநில வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. முன்னதாக இந்நிலம் விஜயநகரம் மகாராஜாவின் கட்டுப்பாட்டிலிருந்தது. உள்ளூரில் உள்ள மலைப்பகுதியான கம்பாலகொண்டா என்ற பெயர் இதற்கு இடப்பட்டது. இது புதர் மற்றும் புல்வெளி கலந்த உலர்ந்த பசுமையான காடாகும், இது 70.70 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இக்காட்டில் காணப்படும் சுட்டிக்காட்டி இனமாக இந்தியச் சிறுத்தை உள்ளது.[1]
விரைவான உண்மைகள் கம்பாலகொண்டா வனவிலங்கு சரணாலயம், அமைவிடம் ...
கம்பாலகொண்டா வனவிலங்கு சரணாலயம் | |
---|---|
ஐயுசிஎன் வகை IV (வாழ்விடம்/இனங்களின் மேலாண்மைப் பகுதி) | |
கம்பாலகொண்டா வனவிலங்கு சரணாலயம் காலைக் காட்சி | |
அமைவிடம் | ஆந்திரப்பிரதேசம், இந்தியா |
அருகாமை நகரம் | விசாகப்பட்டினம் |
பரப்பளவு | 70.70 km2 (17,470 ஏக்கர்கள்) |
நிறுவப்பட்டது | 10 மார்ச் 1970 |
நிருவாக அமைப்பு | ஆந்திரப்பிரதேசம் வனத்துறை |
மூடு