சாகித்திய அகாதமி விருது பெற்ற ஆங்கில எழுத்தாளர் From Wikipedia, the free encyclopedia
கமலா தாஸ் (மலையாளம்: കമല ദാസ്) என்ற இயற்பெயரைக் கொண்ட கமலா சுராயா அல்லது மாதவிக்குட்டி, (மார்ச் 31, 1934 - மே 31, 2009) ஓர் இந்திய எழுத்தாளர். இவர் ஆங்கிலம், மற்றும் மலையாளத்திலும் ஏராளமான சிறுகதைகள் மற்றும் கவிதைகளை எழுதியவர். கேரளாவில் இவரது சிறுகதைகள் மற்றும் இவரது தன் வரலாறு (என் கதா) ஆகியவை புகழ் பெற்றவை.[1]
கமலா தாஸ் | |
---|---|
பிறப்பு | கமலா சுரயா (பொதுவாக கமலா தாஸ்) மார்ச்சு 31, 1934 புன்னயூர்க்குளம், மலபார் மாவட்டம், மதராஸ் பிரெசிடென்சி, பிரித்தானிய இந்தியா |
இறப்பு | மே 31, 2009 75) பூனா, மகாராஷ்டிரா, இந்தியா | (அகவை
புனைபெயர் | மாதவிக்குட்டி |
தொழில் | கவிஞர், சிறுகதை எழுத்தாளர் |
தேசியம் | இந்தியர் |
வகை | கவிதை, சிறுகதை |
கமலா தாஸ் 1934 ஆம் ஆண்டு மார்ச்சு 31 அன்று கேரள மாநிலத்தில் மலபாரிலுள்ள 'புன்னயூர்க் குளம்' (தற்போது திருச்சூர் மாவட்டம்) என்ற ஊரில் பிறந்தார். இவரது தந்தை வி.எம்.நாயர், மாத்ருபூமி என்ற மலையாள தினசரி செய்திதாள் நிறுவனத்தின் நிர்வாக ஆசிரியராக பணியாற்றினார். தாயார் நலபாத் பாலாமணி அம்மா புகழ்பெற்ற மலையாள கவிஞர் ஆவார்.
கமலா தாஸ் தனது 15வது வயதில் மாதவ் தாஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு எம்.டி.நலபட், சினேன் தாஸ், ஜெயசூர்யா தாஸ் என்ற பிள்ளைகள் உண்டு.[2] இவரது மூத்த மகன் எம்.டி.நலபட் ஓர் எழுத்தளர், பத்திரிகை ஆசிரியர். இவர் கேரள திருவாங்கூர் அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசி திருவாதிர திருநல் லக்ஷ்மி பாயி என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். கமலா தாஸ் கணவர் மாதவ் தாஸ் 1993 ஆம் ஆண்டு இறந்தர்.[3]
கமலா ஓர் பாரம்பரிய இந்து நாயர் குடும்பத்தில் பிறந்தவர்.[4] ஆனால் இவர் 1999 ஆம் ஆண்டு இஸ்லாம் மாதத்திற்கு மாறினார். தனது பெயரை கமலா சுரையா என்று மாற்றிக்கொண்டார்.[4]
கமலா அரசியலில் தீவிரமாக செயல்படாதவர். இருந்தும் இவர் அனாதையாக்கப்பட்ட தாய்மார்களின் நலனுக்கும், நாட்டின் மதசார்பற்ற கொள்கையை நிலைத்திட செய்ய லோக் சேவா பார்டி என்ற கட்சியை தொடங்கினார். 1984 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றார்.[5]
கமலா பெரும்பாலும் ஆங்கிலத்தில் கவிதைகள் எழுதிவந்தார். இவரின் முதல் 'கல்கத்தாவில் கோடைகாலம்' 1965 ஆம் ஆண்டு வெளிவந்தது. இதை தொடர்ந்து 'வம்சத்தவர்' என்ற தொகுப்பு 1967 ஆம் ஆண்டு வெளிவந்தது இது பெண்கள் மத்தியில் பெரும் ஈர்ப்பை பெற்றது. மலையாளத்தில் `என் கதா' (My Story) என்ற புத்தகத்தை இவர் எழுதியுள்ளார். இந்த புத்தகம் சுயசரிதையாக கருதப்படுகிறது. இந்த புத்தகம் ஆங்கிலத்திலும் பெயர்க்கப்பட்டது.[6] கமலா கேரள சாகித்ய அகடமியின் துணை தலைவர் பதவி வகித்தார்.[7]
கமலா தனது இலக்கிய படைப்புகளுக்காக பல விருதுகளை பெற்றுள்ளார்.
2003 ஆம் ஆண்டு மே மாதம் 31 அன்று கமலா புனே மருத்துவ மனையில் இறந்தார். அப்போது இவரு வயது 75 ஆகும். இவரது உடல் முழு அரசு மரியாதையோடு முஸ்லிம் வழக்கப்படி திருவனந்தபுரம் பாளையம் ஜும்ஆ பள்ளிவாசலில் அடக்கம் செய்யபட்டது.[14][15] இவரை நினைவுக்கொள்ளும் வகையில் கூகுள் நிறுவனம் தனது முதல் பக்கத்தில் இவரது ஓவியத்தை 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 அன்று வெளியிட்டது. இயக்குனர் கமல் இயக்கிய அம்மி என்ற திரைப்படம் 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 9 அன்று வெளியானது. இந்த திரைப்படம் கமலா சுரையாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவியது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.