கத்தேரி தேக்கக்விதா
From Wikipedia, the free encyclopedia
கத்தேரி தேக்கக்விதா, (1656 – ஏப்ரல் 17, 1680), (திருமுழுக்கு பெயர்: கேத்ரின் தேக்கக்விதா[2][3]) என்றும் மோகாக்கியரின் லில்லி மலர் என்றும் அறியப்படுபவர் ஒரு அல்கோன்குயின்-மோகாக்கிய கத்தோலிக்க கன்னியரும், பொது நிலைத்துறவியும் ஆவார். இவர் தற்போது நியூ யோர்க் மாநிலம் அமைந்துள்ள இடத்தில் பிறந்தவர். இவர் சிறுவயதில் பெரியம்மையால் தாக்கப்பட்டு பிழைத்தவர் ஆவார். இவர் இளமையிலேயே பெற்றோரை இழந்தவர். இவர் தனது 19ஆம் அகவையில் கத்தோலிக்கத்துக்கு மதம் மாறித் திருமுழுக்கு பெற்றார். இதன்பின் இவர் தனது வாழ்நாளை இயேசு சபை மறைபணி தளமான மொண்ட்ரியாலில் உள்ள கானாவாக்கே கிராமத்தில் கழித்தார்.
புனித கத்தேரி தேக்கக்விதா | |
---|---|
கத்தேரி தேக்கக்விதா காலத்திலேயே வரையப்பட்ட அவரின் ஓவியம், காலம்: சுமார் 1690 ஓவியர்: அருட்தந்தை ஷோஷத்தியே | |
கன்னியர்;[1] பொது நிலைத்துறவி | |
பிறப்பு | 1656 ஓசர்நினோன், இரோக்குவா பிரதேசம் - 1793 வரை "புது பிரான்சு" (தற்போது ஓரிஸ்வில், நியூ யோர்க் மாநிலம்) |
இறப்பு | ஏப்ரல் 17, 1680 கானாவாக்கே, மொண்ட்ரியால், கியூபெக், கனடா |
ஏற்கும் சபை/சமயங்கள் | கத்தோலிக்க திருச்சபை |
அருளாளர் பட்டம் | ஜூன் 22, 1980, வத்திக்கான் நகர் by இரண்டாம் யோவான் பவுல் |
புனிதர் பட்டம் | அக்டோபர் 21, 2012, வத்திக்கான் நகர் by திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் |
முக்கிய திருத்தலங்கள் | புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம், கியூபெக், கனடா |
திருவிழா | ஜூலை 14 (அமெரிக்க ஐக்கிய நாடு), ஏப்ரல் 17 (கனடா) |
சித்தரிக்கப்படும் வகை | லில்லி மலர்; கடல் ஆமை; செபமாலை |
பாதுகாவல் | சூழலியலாளர், சுற்றுச்சூழல், சூழலியம், அனாதைகள், நாடுகடத்தப்பட்டவர், தங்களது பக்திக்காக கேலிக்கு உள்ளாகுபவர், அமெரிக்க முதற்குடிமக்கள், |
இவர் தனது 24ஆம் அகவையில் கற்பு நிலை உறுதிபூண்டார். தனது நல்லொழுக்கத்திற்கும் கற்பு நிலைக்கும் பேர்போன இவர் தனது கடும் தவ முயற்சிக்காக அறியப்படுகின்றார். இவர் கத்தோலிக்கத்துக்கு மதம் மாறியதால் தனது சொந்த குடும்பத்தாலும், இனத்தாலும் ஒதுக்கப்பட்டார்.
அமெரிக்க முதற்குடிமக்களுள் திருச்சபையின் பீட மகிமை அளிக்கப்பட்ட முதல் பெண் இவர் ஆவார். இவருக்குத் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் 1980இல் அருளாளர் பட்டம் அளித்தார். திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட், அக்டோபர் 21, 2012இல் புனித பேதுரு பேராலயத்தில் இவருக்குப் புனிதர் பட்டம் அளித்தார். பல்வேறு அதிசயங்களும் இயற்கைக்கு மீறிய நிகழ்வுகளும் இவரது மரணத்திற்கு பின்னர் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.