கங்கா சரண் சிங் விருது
From Wikipedia, the free encyclopedia
கங்கா சரண் சிங் விருது (Ganga Sharan Singh Award, தேவநாகரி: गंगाशरण सिंह पुरस्कार) இந்திய அரசின் மனிதவள மேம்பாடு அமைச்சகத்தின் நடுவண் இந்தி அமைப்பாகிய கேந்திரிய இந்தி சன்சுதான் இந்திமொழியை பரப்பவும் இந்திமொழிப் பயிற்சிக்கும் பேருதவியாக இருந்த இலக்கியவாதிகளுக்கு தேசிய அளவில் வழங்கும் விருதாகும். 1989ஆம் ஆண்டு இந்தி பயிற்றுவிக்கும் திட்டத்தின் வெள்ளிவிழாக் கொண்டாட்டங்களின்போது நிறுவப்பட்ட ஏழு விருதுகளில் இதுவும் ஒன்றாகும். [1] இந்திய விடுதலை வீரரும் இந்தி மொழிப் பற்றாளருமான கங்கா சரண் சிங் நினைவாக இந்த விருது நிறுவப்பட்டுள்ளது.
விரைவான உண்மைகள் விருது குறித்தத் தகவல் ...
கங்கா சரண் விருது | ||
விருது குறித்தத் தகவல் | ||
---|---|---|
பகுப்பு | இந்தி மொழி வளர்ச்சி (3-16 தனிநபர்கள்) | |
நிறுவியது | 1989 | |
முதலில் வழங்கப்பட்டது | 1989 | |
கடைசியாக வழங்கப்பட்டது | 2007 | |
மொத்தம் வழங்கப்பட்டவை | 90 | |
வழங்கப்பட்டது | கேந்திரிய இந்தி சன்சுதான், இந்திய அரசு | |
விவரம் | இந்திய இலக்கிய விருது |
மூடு