ஔவை துரைசாமி
தமிழறிஞர், எழுத்தாளர் / From Wikipedia, the free encyclopedia
ஔவை சு. துரைசாமி (5 செப்டம்பர் 1902 – 3 ஏப்ரல் 1981) ஒரு தமிழ்நாட்டுத் தமிழறிஞர் மற்றும் கல்வியாளர் ஆவார். நற்றிணை, சிலப்பதிகாரம், திருவருட்பா உள்ளிட்ட பல பனுவல்களுக்கு உரை எழுதியமையால் 'உரைவேந்தர்' என அழைக்கப்பெற்றார். கலைமாமணி விருது உள்ளிட்ட சிறப்புகளைப் பெற்றுள்ளார். தமிழறிஞர் ஔவை நடராசன் இவர் மகன்களுள் ஒருவராவார். மேலும் தமிழ்நாட்டு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தற்போதைய இயக்குநர் ந. அருள் இவரின் பேரன் ஆவார்.
விரைவான உண்மைகள் உரைவேந்தர் ஔவை. சு. துரைசாமி, பிறப்பு ...
உரைவேந்தர் ஔவை. சு. துரைசாமி | |
---|---|
![]() | |
பிறப்பு | துரைசாமி 5 செப்டம்பர் 1902 அவ்வையார்குப்பம், தென் ஆற்காடு மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா) |
இறப்பு | 3 ஏப்ரல் 1981(1981-04-03) (அகவை 78) மதுரை, தமிழ்நாடு, இந்தியா |
இறப்பிற்கான காரணம் | வயது மூப்பு |
கல்லறை | மதுரை |
இனம் | தமிழர் |
குடியுரிமை | இந்தியர் |
அறியப்படுவது | தமிழறிஞர், பேச்சாளர், எழுத்தாளர், உரையாசிரியர் |
பெற்றோர் | சுந்தரம் பிள்ளை, சந்திரமதி |
வாழ்க்கைத் துணை | உலோகாம்பாள் |
பிள்ளைகள் | 1. பாலகுசம் (மகள்), 2. ஔவை நடராசன் (மகன்), 3. மணிமேகலை (மகள்), 4. திலகவதி (மகள்), 5. தமிழரசி (மகள்), 6. ஔவை திருநாவுக்கரசு (மகன்), 7. ஔவை ஞானசம்பந்தன் (மகன்), 8. மருத்துவர் மெய்கண்டான், 9. மருத்துவர் நெடுமாறன் (மகன்) |
உறவினர்கள் | ந. அருள் (பேரன்) |
விருதுகள் | கலைமாமணி விருது |
மூடு