ஓக்லா சரணாலயம்
From Wikipedia, the free encyclopedia
ஓக்லா பறவைகள் சரணாலயம் (Okhla Bird Sanctuary) அதிகாரப்பூர்வமாக சாகீத் சந்தர் சேகர் ஆசாத் சரணாலயம் என்று அழைக்கப்படுகிறது. இது யமுனா ஆற்றின் குறுக்கே ஓக்லா தடுப்பணையில் உள்ள ஒரு பறவைகள் சரணாலயமாகும் . இது டெல்லி - உத்தரப்பிரதேச மாநில எல்லையில் உள்ள கௌதம புத்த நகர் மாவட்டத்தில் நொய்டாவில் அமைந்துள்ளது. மேலும், இது 300 க்கும் மேற்பட்ட பறவை இனங்கள், குறிப்பாக நீர் பறவைகளுக்கு புகலிடமாக அறியப்படுகிறது. [1] 1990 இல்,யமுனா நதியில் 3.5 சதுர கிலோமீட்டர் (1.4 சதுர மைல்) பரப்பளவு கொண்ட ஒரு பறவைகள் சரணாலயத்தை 1972 ஆம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உத்தரபிரதேச அரசால் நிறுவப்பட்டது. யமுனா நதி உத்தரபிரதேசத்திற்குள் நுழையும் இடத்தில் இந்த தளம் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்தின் மிக முக்கியமான அம்சம், மேற்கு திசையில் ஓக்லா கிராமத்துக்கும் கிழக்கே கௌதம புத்தர் நகருக்கும் இடையில் அமைந்துள்ள நதியை அணைப்பதன் மூலம் உருவாக்கப்பட்ட பெரிய ஏரி ஆகும். ஓக்லா பறவைகள் சரணாலயம் சுமார் 4 சதுர கிலோமீட்டர் அளவு கொண்டது. உத்தரபிரதேசத்தின் கௌதம புத்தர் நகர் மாவட்டத்தில் நொய்டாவின் நுழைவாயிலில் அமைந்துள்ளது. தில்லி பிரதேசத்தை விட்டு வெளியேறி உத்தரப்பிரதேச மாநிலத்தில் யமுனா நதி நுழையும் ஒரு இடத்தில் இது அமைந்துள்ளது. இது மாநிலத்தின் பதினைந்து பறவைகள் சரணாலயங்களில் ஒன்றாகும்.
ஓக்லா சரணாலயம் | |
---|---|
சாகீத் சந்தர் சேகர் ஆசாத் சரணாலயம் | |
அமைவிடம் | நொய்டா, கௌதம புத்தா நகர் மாவட்டம், உத்தரப் பிரதேசம், இந்தியா |
அருகாமை நகரம் | நொய்டா |
ஆள்கூறுகள் | 28.565°N 77.303°E / 28.565; 77.303 |
பரப்பளவு | 3.5 சதுர கிலோமீட்டர்கள் (1.4 sq mi) |
நிறுவப்பட்டது | 1990 |
நிருவாக அமைப்பு | இந்திய அரசு |
முள் புதர், புல்வெளி மற்றும் ஈரநிலத்தின் பறவை இனங்கள் சரணாலயத்தில் அதன் இருப்பிடத்தின் காரணமாக அதிகம் காணப்படுகின்றன. இந்த ஈரநிலம் ஓக்லா தடுப்பணையை உருவாக்கியதன் மூலம் உருவாக்கப்பட்டது. உத்தரப்பிரதேச அரசு 1990 ஆம் ஆண்டில் இதை ஒரு சரணாலயமாக நிறுவியது. இது இப்போது இந்தியாவின் 466 முக்கியமான பறவை பகுதிகளில் ஒன்றாகும்.