ஐக்கிய இராச்சியத்தின் நான்காம் ஜார்ஜ்
From Wikipedia, the free encyclopedia
நான்காம் ஜார்ஜ் (George IV, 12 ஆகத்து 1762 – 26 சூன் 1830) பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்து மன்னரும், அனோவர் இராச்சியத்தின் மன்னரும் ஆவார். இவரது தந்தை மூன்றாம் ஜார்ஜ் மன்னர் 1820 சனவரி 29 இல் இறந்ததை அடுத்து பதவிக்கு வந்து இறக்கும் வரை பதவியில் இருந்தார். 1811 முதல் அவரது தந்தை மனநோய் வாய்ப்பட்ட போது ஆட்சிப் பொறுப்பாளராக இருந்து வந்தார்.
நான்காம் ஜார்ஜ் George IV | |||||
---|---|---|---|---|---|
சர் தோமசு லாரன்சு 1821 இல் வரைந்தது | |||||
ஐக்கிய இராச்சியத்தின் மன்னர், அனோவரின் மன்னர் | |||||
ஆட்சிக்காலம் | 29 சனவரி 1820 – 26 சூன் 1830 | ||||
Coronation | 19 சூலை 1821 | ||||
முன்னையவர் | மூன்றாம் ஜார்ஜ் | ||||
பின்னையவர் | நான்காம் வில்லியம் | ||||
பிறப்பு | (1762-08-12)12 ஆகத்து 1762 சென் யேம்சு அரண்மனை, இலண்டன் | ||||
இறப்பு | 26 சூன் 1830(1830-06-26) (அகவை 67) வின்ட்சர் கோட்டை, பெர்க்சயர் | ||||
புதைத்த இடம் | 15 சூலை 1830 சென் ஜோர்ஜ் கோவில், வின்சர் அரண்மனை | ||||
துணைவர் | கரொலைன் | ||||
குழந்தைகளின் பெயர்கள் | வேல்சு இளவரசி சார்லட் | ||||
| |||||
மரபு | அனோவர் மாளிகை | ||||
தந்தை | மூன்றாம் ஜார்ஜ் | ||||
தாய் | சார்லட் | ||||
மதம் | சீர்திருத்தத் திருச்சபை | ||||
கையொப்பம் |
நான்காம் ஜார்ஜ் தனது ஆட்சிக் காலத்தில் ஆடம்பரமான வாழ்க்கை நடத்தினார். பிரைட்டன் நகரில் ராயல் பவிலியனை நிர்மாணிக்கவும் பக்கிங்காம் அரண்மனையைப் புதுப்பிக்கவும் ஜான் நாசு என்ற கட்டிடக் கலைஞரை நியமித்தார். வின்சர் அரண்மனையைப் புதுப்பித்தார். அவரது அழகு மற்றும் கலாச்சாரம் அவருக்கு "இங்கிலாந்தின் முதல் மனிதர்" என்ற பெயரைத் தேடித் தந்தது. ஆனாலும் அவரது தந்தையுடனும் மனைவி கரொலைன் உடனான உறவு சிறந்ததாக இருக்கவில்லை. அவரது கலகலப்பான வாழ்க்கை முடியாட்சியின் கௌரவத்திற்கு இழுக்கைத் தேடித் தந்தது. தனது முடிசூட்டு விழாவிற்கு கரொலைனை அழைக்கவில்லை. அவரை திருமண பந்தத்தில் இருந்து விலத்தி வைக்க எடுத்த அவரது முயற்சியும் கைகூடவில்லை.
ஜார்ஜின் ஆட்சிக் காலத்தில், அரசாங்கத்தை பிரதமராகப் பதவியில் இருந்த லிவர்பூல் பிரபு கவனித்துக் கொண்டார். அமைச்சர்கள் ஜார்ஜின் நடத்தை சுயநலமானதும், பொறுப்பற்ற தன்மையாகவும் இருக்கக் கண்டனர். எல்லா நேரங்களிலும் அவர் தனக்கு மிகவும் பிடித்தவர்களின் செல்வாக்கின் கீழ் இருந்தார்.[1] நெப்போலியப் போர்களின் போது வீணான செலவுகள் செய்யப்பட்டதாக வரி செலுத்துவோரின் கோபத்திற்கு உள்ளானார். நெருக்கடியான காலகட்டங்களில் தேசியத் தலைவராகத் தன்னைக் காட்டிக் கொள்ளாததுடன், மக்களுக்கு ஒரு முன்மாதிரியாகவும் இருக்கவில்லை. போர் வெற்றியை பிரதமர் லிவர்பூலின் அரசாங்கமே கொண்டாடியது. அரசாங்கமே அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டது. பிரதமர் லிவர்பூல் இளைப்பாறிய பின்னர், கத்தோலிக்கர்களின் சுதந்திரத்தை எதிர்த்து வந்தாலும், ஜார்ஜ் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. இவரது ஒரேயொரு சட்டபூர்வமான பிள்ளை இளவரசி சார்லட் 1817 இல் ஜார்ஜ் இறக்க முன்னரேயே இறந்து விட்டார். இதனால் ஜார்ஜிற்குப் பின்னர் அவரது இளைய சகோதரர் வில்லியம் ஆட்சியில் அமர்ந்தார்.