![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/b1/Mysore_painting.jpg/640px-Mysore_painting.jpg&w=640&q=50)
எண்மனையாட்டி
From Wikipedia, the free encyclopedia
எண்மனையாட்டி அல்லது அஷ்டபார்யா என்பது கண்ணனின் மனைவியராகச் சொல்லப்படும் எட்டுத் தேவியரையும் மொத்தமாகக் குறிப்பிடப் பயன்படும் பதம் ஆகும். நூலுக்கு நூல், இந்தப் பட்டியலில் வேறுபாடுகள் காணப்பட்டாலும், அறுபதினாயிரம் தேவியர், ராதை மற்றும் தமிழ் வழக்கு நப்பின்னை தவிர, இந்த எட்டு மகளிரே கண்ணனின் முக்கியமான தேவியர் என்ற குறிப்பு, பெருவாரியான வைணவப் பெருநூல்களிலும் சொல்லப்படுகின்றது.எனினும், ருக்மணி, சத்யபாமா ஆகிய இருவரையும் கண்ணனுடன் இணைத்துச் சொல்வதே, பெரும்பாலும் வழக்கத்தில் இருக்கின்றது.[1]
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/b1/Mysore_painting.jpg/320px-Mysore_painting.jpg)