![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/0c/Inland_Customs_Line_India.png/640px-Inland_Customs_Line_India.png&w=640&q=50)
உப்பு வேலி
இந்தியாவின் பெரும் வேலி / From Wikipedia, the free encyclopedia
உப்பு வேலி என்பது ஆங்கிலேயர்களால் இந்தியாவில் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு உப்பு கொண்டு செல்வதைத் தடுக்க ஏற்படுத்தப் பட்டிருந்த சுங்க வேலியாகும். ஆங்கில அரசு உப்புக்கு வரி விதித்திருந்ததால் அதை மக்கள் கொடாமல் இருப்பதைத் தடுத்து வரி வசூலிக்க இது ஏற்படுத்தப்பட்டது. இது அதிக அளவாக 4000 கிலோ மீட்டருக்கு மேலான நீளமும் 12 அடி உயரமும் கொண்டிருந்தது. 1803-ஆம் ஆண்டு வாக்கில் இவ்வேலி அமைத்தல் தொடங்கப்பட்டது.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/0c/Inland_Customs_Line_India.png/640px-Inland_Customs_Line_India.png)
ஒரு சமயத்தில் இதன் பாதுகாப்பில் 14000 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்[1].
உப்பின் மீதான இந்த வரி 1930-இல் தொடங்கிய உப்பு சத்தியாகிரகத்திற்கு ஒரு காரணமாக அமைந்தது.