உத்திராகண்ட வரலாறு
From Wikipedia, the free encyclopedia
உத்தராகண்டம் என்பது இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தின் மலை மாவட்டங்களில் இருந்து புதியதாக உருவாக்கப்பட்ட மாநிலத்தின் புதிய மற்றும் பாரம்பரியப் பெயராகும். உத்தராகண்ட் என்ற பெயர் சமஸ்கிருத மொழியில் வடக்கு நிலம் அல்லது வடக்குப் பகுதி என பொருள் தருவதாகும், உத்தராகண்ட் என்ற பெயரை துவக்கக்காலத்தில் கேதர்கண்ட் மற்றும் மனஸ்கண்ட் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த நிலப்பரப்பை குறிப்பிட இந்து வேதங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய இமயமலைப் பகுதியில் உள்ள உத்தராகண்டமானது பழங்கால இந்திய புராணங்களில் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. அதன் சிகரங்கள் மற்றும் பள்ளத்தாக்குகள் கங்கை ஆற்றின் ஆதாரமாக விளங்குகிறது. இங்கு பல இந்து யாத்திரைத் தலங்கள் உள்ளதால் பழங்காலத்திலிருந்து, இது "கடவுள்களின் தேசம்" (தேவ்பூமி) என அழைக்கப்படுகிறது. இப்பகுதியை பௌரவர், குசான், குலிந்தர், குப்தர், கடியூரிகள், பாலா, சேண்ட்டுகள், பரமரா அல்லது பன்வா, பிரித்தானியர் ஆகியோர் ஆட்சிபுரிந்துள்ளனர்.[1]