From Wikipedia, the free encyclopedia
உதய்பானு சிங் (Udaybhanu Singh) (1893 பிப்ரவரி 12 - 1954 அக்டோபர் 22) இவர் 1911-1949 வரை தோல்பூர் மாநிலத்தின் ஆட்சியாளராக இருந்தார்.[1] [2] அதன் பிறகு மாநிலம் இந்திய ஒன்றியத்துடன் இணைந்தது. இவர் பம்ராலியா வம்சத்தைச் சேர்ந்த ஜாட் இனத்தைச் சேர்ந்தவராவார். இவர் தனது சகோதரர் இராணா ராம் சிங்கிற்குப் பிறகு 1911 இல் பதவிக்கு வந்து வாரிசு இல்லாமல் இறந்தார். இவர் 1913 அக்டோபர் 9 அன்று முழு ஆளும் உரிமைகளைப் பெற்றார்.
உதயபானு சிங் | |
---|---|
தோல்பூரின் மகாராஜா | |
ஆட்சிக்காலம் | 1911-1949 |
முன்னையவர் | இராம் சிங் |
பின்னையவர் | ஹேமந்த் நிங் |
துணைவர் | மல்வேந்தர் கௌர் |
குழந்தைகளின் பெயர்கள் | ஊர்மிளா குமாரி |
மரபு | பம்ராலியா வம்சம் |
தந்தை | ராணா நிகல் நிங் |
மதம் | இந்து |
அஜ்மீரில் உள்ள மயோ கல்லூரியில் கல்வி கற்ற இவர் பின்னர் தேராதூனிலுள்ள பேரரசின் இராணுவப் பள்ளியில் சேர்ந்தார்.
இவர் தோல்பூர் மாநிலத்தின் கடைசி ஆட்சியாளராக இருந்தார். மேலும் 1931 இல் வட்ட மேசை மாநாட்டில் பிரதிநிதியாக பணியாற்றினார். 1947 இல் இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு, தோல்பூரை ஏப்ரல் 7, 1949 அன்று இந்திய ஒன்றியத்தில் இணைத்தார். தோல்பூர் மூன்று அண்டை மாநிலங்களுடன் ஒன்றிணைந்து இந்திய தொழிற்சங்கத்திற்குள் மத்சய ஒன்றியத்தை உருவாக்கியது. [3] அதில் இவர் அரசப்பிரநிதியாக நியமனம் செய்யப்பட்டார். ஆனால் பின்னர் ஒன்றியம் இதுபோன்ற பல ஒன்றியங்கங்களுடன் இணைக்கப்பட்டு இன்றைய ராஜஸ்தான் மாநிலத்தை உருவாக்கியது.
1911 ஏப்ரலில் இவர் என்பவரை, ஜிந்த் மாநிலத்தின் தலைவர் சம்சர் சிங்கின் மகளான மால்வேந்தர் கவுர் என்பவரை மணந்தார். தம்பதியருக்கு ஒரே மகள் இருந்தாள்
இவர் 43 ஆண்டு ஆட்சிக்குப் பிறகு 1954 அக்டோபர் 22 அன்று 61 வயதில் இறந்தார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.