இஷ்தர் கோயில் நுழைவாயில்
பாபிலோனின் உள் நகரத்திற்கு எட்டாவது வாயில் / From Wikipedia, the free encyclopedia
இஷ்தர் கோயில் நுழைவாயில் (Ishtar Gate ) (அரபு மொழி: بوابة عشتار) புது பாபிலோனியப் பேரரசர் இரண்டாம் நெபுகாத்நேசர், தற்கால ஈராக் நாட்டின் பண்டைய பாபிலோன் நகரக் கோட்டையின் எட்டு நுழைவாயில்களில் ஒன்றில் நிறுவிய இஷ்தர் தெய்வத்திற்கான கோயிலின் நுழைவு வாயில் ஆகும்.
இஷ்தர் கோயில் நுழைவாயிலை, கிமு 575ல் புது பாபிலோனியப் பேரரசர் இரண்டாம் நெபுகாத்நேசர் (ஆட்சிக் காலம்:கிமு 604 - 562) கிமு 575ல் 120 சிங்கங்கள், காளை மற்றும் யாழிகளின் சிற்பங்களுடன் கட்டினார்.
இஷ்தர் கோயிலின் கோட்டைச்சுவர் மற்றும் நுழைவு வாயில், கிபி 1930ல் நடைபெற்ற அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்டது. இஷ்தர் கோயில் நுழைவுவாயிலை சீரமைத்து பெர்லின் நகரத்தின் பெர்கமோன் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.