![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/66/Licypriya.jpg/640px-Licypriya.jpg&w=640&q=50)
இலிசிப்ரியா கங்குஜாம்
From Wikipedia, the free encyclopedia
இலிசிபிரியா கங்குஜாம் (Licypriya Kangujam) இந்தியாவைச் சேர்ந்த குழந்தை சுற்றுச்சூழல் ஆர்வலராவார் . உலகளவில் இளைய காலநிலை ஆர்வலர்களில் ஒருவரான இவர், எசுப்பானியாவின் மத்ரித்தில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் காலநிலை மாநாடு 2019 (சிஓபி 25) நிகழ்ச்சியில் உலகத் தலைவர்களிடையே உரையாற்றினார். உடனடியாக காலநிலை சார்ந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார். 2018 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் காலநிலை நடவடிக்கைகளுக்காகவும், இந்தியாவின் உயர் மாசு அளவைக் கட்டுப்படுத்த புதிய சட்டங்களை இயற்றவும், பள்ளிகளில் காலநிலை அளவை மாற்ற கல்வியறிவை கட்டாயமாக்கவும் இவர் பிரச்சாரம் செய்து வருகிறார்.[2][3][4][5]
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/5c/Licypriya_with_UN_Secretary_General2.jpg/640px-Licypriya_with_UN_Secretary_General2.jpg)
இலிசிப்ரியா கங்குஜாம் | |
---|---|
![]() 5 செப்டம்பர் 2019 அன்று தாய்லாந்தின் பேங்காக்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் ஆசிய-பசிபிக் காலநிலை வாரத்தில் இலிசிபிரியா கங்குஜாம். | |
பிறப்பு | இலிசிப்ரியா கங்குஜாம் 2 அக்டோபர் 2011 (2011-10-02) (அகவை 12) பாஷிகோங் , மணிப்பூர், இந்தியா |
பணி | மாணவி, சுற்றுச்சூழல் ஆர்வலர் |
செயற்பாட்டுக் காலம் | 2018– தற்போது வரை |
அறியப்படுவது | காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடும் குரல் |
அரசியல் இயக்கம் | குழந்தை இயக்கம் |
பெற்றோர் |
|
உறவினர்கள் | சிங்கிள்சானா சிங் (மாமா) |
விருதுகள் |
|
இந்த வார்த்தையின் பயன்பாடு இவருக்கு பிடிக்கவில்லை என்றாலும், இவர் இந்தியாவின் கிரெட்டா துன்பர்க் என்று கருதப்படுகிறார்.[6]
இலிசிப்ரியா சூலை 2018 இல் காலநிலை மாற்றத்திற்கு எதிராக வாதிடத் தொடங்கினார். 21 சூன் 2019 அன்று, காலநிலை ஆர்வலர் கிரெட்டா துன்பர்க்கால் ஈர்க்கப்பட்டு, இந்தியாவில் காலநிலை மாற்றச் சட்டத்தை நிறைவேற்ற பிரதமர் நரேந்திர மோதியின் கவனத்தை ஈர்க்க இந்திய நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே ஒரு வாரம் முகாமிடத் தொடங்கினார். ஆகத்து 31, 2019 அன்று, ஆத்திரேலியாவின் பொருளாதாரம் மற்றும் அமைதி நிறுவனம் (IEP), இளைஞர்களை வளர்ப்பதற்கான பிராந்திய கூட்டணி மற்றும் மாலத்தீவு அரசாங்கத்தின் இளைஞர் விளையாட்டு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சகம் ஏற்பாடு செய்த நிகழ்வில் திரு. சார்லஸ் ஆலன் வழங்கிய "உலக குழந்தைகள் அமைதி பரிசு 2019" ஐ இவர் பெற்றார். அமெரிக்காவின் வாசிங்டன், டி. சி.யில் அமைந்துள்ள "எர்த் டே நெட்வொர்க்" தலைமையகத்தால் "வளர்ந்து வரும் நட்சத்திரம்" என்ற பட்டமும் இவருக்கு வழங்கப்பட்டது.[7]
இந்தி மொழி நாளேடுகளில் ஒன்றான தைனிக் பாஸ்கர் நவம்பர் 19, 2019 அன்று, சண்டிகர் பல்கலைக்கழகத்தில் வழங்கிய "நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்கான தூதர் விருது 2019" ஐ இந்திய அரசின் நிதி ஆயோக்குடன் இணைந்து பெற்றார். 2020 ஜனவரி 3 ஆம் தேதி புது தில்லியில் புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் கிரண் பேடியிடமிருந்து "உலகலாவிய குழந்தை மேதை விருது 2020" ஐ பெற்றார்.[8] பிப்ரவரி 18, 2020 அன்று இந்தியாவின் புது தில்லி தில்லி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற TEDxSBSC இல் உரையாற்றினார். 23 பிப்ரவரி 2020 அன்று இவர் மும்பையில் நடைபெற்ற TEDxGateway லும் உரையாற்றினார். மேலும் இவரது பேச்சுக்கு அனைவராலும் எழுந்து நின்று பாராட்டும் ஒரு வரவேற்பைப் பெற்றார்.[9][10][11][12]