இலங்கைப் பொருளாதார நெருக்கடி (2019–தற்போது)
கோவியட்-19 பெருந்தொற்றால் 2020 பொருளாதார வீழ்ச்சி / From Wikipedia, the free encyclopedia
இலங்கைப் பொருளாதார நெருக்கடி என்பது 2019 இல் தொடங்கிய இலங்கை நாட்டில் நடந்து வரும் நெருக்கடியாகும்.[7] 1948 இல் விடுதலை பெற்ற பின்னர் நாட்டில் ஏற்பட மிக மோசமான பொருளாதார நெருக்கடி இதுவாகும்.[7] 2010 ஆம் ஆண்டிலிருந்து, இலங்கையின் வெளிநாட்டுக் கடன் கடுமையாக உயர்ந்தது. 2019 இல் அது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 88% ஐ எட்டியது.[8] கோவியட்-19 பெருந்தொற்றால் ஏற்பட்ட உலகளாவிய பொருளாதார மந்தநிலையின் தொடக்கமானது நெருக்கடியை விரைவு படுத்தியது. மேலும் 2021 ஆம் ஆண்டில், வெளிநாட்டுக் கடன், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 101% ஆக உயர்ந்தது. இதனால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் 2022 இலங்கைப் போராட்டங்களுக்கு வழிவகுத்தன.
2019–present Sri Lankan economic crisis | |||
---|---|---|---|
திரவ பெட்ரோலிய வாயு கொள்கலன்களை நிரப்ப பல மணிநேரம் காத்திருக்கும் மக்கள் | |||
தேதி | 21 ஏப்ரல் 2019 — தற்போது வரை (5 ஆண்டு-கள், 1 மாதம், 1 வாரம் and 2 நாள்-கள்) | ||
அமைவிடம் | இலங்கை | ||
காரணம் |
| ||
நிலை | நடப்பில் | ||
உயிரிழப்புகள் மற்றும் இழப்புகள் | |||
சனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான இலங்கையின் அரசாங்கம், தொடர்ச்சியாக அடுக்கடுக்கான கொள்கைப் பிழைகளை மேற்கொண்டது. இதன் விளைவாக, இலங்கைக்குப் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. 2019 சனாதிபதித் தேர்தலில் அமோக வெற்றிபெற்றதைத் தொடர்ந்து 2020 நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றியை ஈட்டி ஆட்சியை முழுமையாகக் கைப்பற்றியது. அதன்பிறகு அதன் பொருளாதாரக் கொள்கையில் பல தவறுகளைச் செய்தது. தேர்தலில் வெற்றி பெறுவதற்கான அதன் ஜனரஞ்சக திட்டங்களின் ஒரு பகுதியாக தற்போதைய அரசாங்கமானது வருவாய் மற்றும் நிதிக் கொள்கைகளில் பெரும் வரிக் குறைப்புகளைச் செய்தது. வரி குறைப்பு காரணமாக, பட்ஜெட் பற்றாக்குறையானது 2020 இல் 5% இல் இருந்த நிலையில் 2022 இல் 15% ஆக உயர்ந்தது. மேலும் மோசமான நிதிக் கொள்கைகளை அமுல்படுத்தியதும் இலங்கைக்கு ஒரு பேரழிவு நிலைமையை ஏற்படுத்தியது. இலங்கையில் சாதாரண குடிமக்கள் உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவைத் தாங்கிக்கொள்ள முடியாத நிலையில் சமூக அமைதியின்மை மற்றும் எதிர்ப்புக்கள் ஏற்படக் காரணமாயிற்று. 2022 சூலையில் இலங்கை அரசு திருப்பி செலுத்த வேண்டிய கடன்களில் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கடன் பத்திரங்கள் உட்பட, $7 பில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்படும் நிலையில், 2022 மார்ச் நிலவரப்படி இலங்கை அரசிடம் கையிருப்பில் உள்ள அந்நிய செலாவனி 2.3 பில்லியன் அமெரிக்க டாலர் என்பது, போதுமானதாக இருக்காது என்பதால், இலங்கை திவால்நிலையின் விளிம்பில் உள்ளது. தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின்படி, 2022 பெப்ரவரியில் தேசிய பணவீக்க விகிதம் 17.5% ஆக அதிகரித்தது.[9]
2022 ஆம் ஆண்டு சூன் மாதம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில், பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துவிட்டதாகவும், அத்தியாவசியப் பொருட்களுக்கான செலவாணியை முடியாமல் போனதாகவும் கூறினார்.[10]