இறகுப் பேனா
From Wikipedia, the free encyclopedia
இறகுப் பேனா அல்லது இறகு எழுதுகோல் (quill pen) என்பது பறவையின் இறகைக் கொண்டு செய்யப்பட்ட ஒரு எழுது கருவி ஆகும். இந்த இறகு எழுதுகோலானது நனை பேனா, தூவல், குமிழ்முனைப் பேனா போன்றவை கண்டு பிடிப்பதற்கு முன் வழக்கில் இருந்த ஒரு பேனா ஆகும். இந்த இறகு பேனாவின் முனையை மையில் நனைத்து தாளில் எழுதிவந்தனர். இவை கையால் வெட்டி செய்யப்பட்ட எழுது கருவியாகும்.