![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/dd/Relief_of_Gandaberunda_bird_%2528two_headed%2529_in_the_Rameshwara_temple_at_Keladi.jpg/640px-Relief_of_Gandaberunda_bird_%2528two_headed%2529_in_the_Rameshwara_temple_at_Keladi.jpg&w=640&q=50)
இருதலைப்புள்
இந்துத் தொன்மங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இரு தலைகளைக் கொண்ட ஒரு பறவை / From Wikipedia, the free encyclopedia
இருதலைப்புள், சிம்புள் அல்லது கண்டபேருண்டப் பறவை (கன்னடம் ಗಂಡಭೇರುಂಡ), (சமசுகிருதம் भेरुण्ड) என்பது இந்து தொன்மவியல் கூறும் ஒரு பறவை. இது இருதலைப்பாம்பு போல் இரண்டு பக்கம் தலை கொண்ட பறவை. அல்லது இரண்டு தலை கொண்ட ஓருருவப் பறவை. இது இரண்டு தலை கொண்ட குழந்தை போன்றது. [1] இந்து தொன்மவியல்படி இது மகத்தான மந்திர சக்தியைக் கொண்டது என நம்பப்படுகிறது. இது கர்நாடக மாநில அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ சின்னமாக பயன்படுத்தப்படுகிறது, ஏனெனில் இது வலிமையின் அடையாளமாகவும், அழிவு சக்திகளை எதிர்த்து போராடுவதாகவும் நம்பப்படுகிறது. இது பல இந்து கோவில்களில் சிற்பமாக செதுக்கப்பட்டு சிற்ப வடிவமாக உள்ளது.[2]
![]() |
![]() | |
இடது: கேளடி இராமேசுவரர் கோயிலில் கூரைச்சிற்பமாக இருதலைப்புள். வலது: தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் அலங்கார உருவமாக இருதலைப்புள் |
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f6/2HeadsCow.jpg/320px-2HeadsCow.jpg)