இராச்டிரிய ஜனதா தளம்
இந்திய அரசியல் கட்சி / From Wikipedia, the free encyclopedia
இராஷ்டிரிய ஜனதா தளம் ஓர் இந்திய அரசியல் கட்சியாகும். இது 1997 ஆம் ஆண்டு லாலு பிரசாத் யாதவால் தொடங்கப்பட்டது. இதன் சின்னம் கூண்டு விளக்கு (Lantern) ஆகும். $250 மில்லியன் மாட்டு தீவன ஊழலில் தொடர்புடையதால் அப்போதய பீகாரின் முதல்வரும், ஜனதா தளத்தின் முன்னாள் தலைவருமான லாலு பிரசாத் யாதவை மாட்டுத் தீவன ஊழல் தொடர்பாக ஜனதா தளத்தின் தலைவர் சரத் யாதவ் கட்சியை விட்டு 1987ல் நீக்கினார்.[1] இதன் காரணமாகவே லாலு பிரசாத் யாதவ் இராஷ்டிரிய ஜனதா தளத்தைத் தொடங்கினார். பீகார், ஜார்கண்ட், மணிப்பூரில் மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட இராஷ்டிரிய ஜனதா தளம், வடகிழக்கு மாநிலங்களில் போதிய வாக்குகள் பெற்றதால் 2008இல் தேசியக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது.
இராஷ்டிரிய ஜனதா தளம் | |
---|---|
தலைவர் | லாலு பிரசாத் யாதவ் |
தொடக்கம் | 1997 |
தலைமையகம் | 13, வி பி அவுஸ், இராஃபி மார்க், புது தில்லி - 110001 |
கொள்கை | பெருந்திரள் வாதம் (பரப்பியம்) |
அரசியல் நிலைப்பாடு | நடுவம் |
தேர்தல் சின்னம் | |
இணையதளம் | |
www.rashtriyajanatadal.com | |
இந்தியா அரசியல் |
2004 தேர்தலில் 24 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்ற இராஷ்டிரிய ஜனதா தளம் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகித்தது, இதன் தலைவர் லாலு பிரசாத் யாதவ் இரயில்வே துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.