இராதா மதன் மோகன் கோயில்
From Wikipedia, the free encyclopedia
இராதா மதன் மோகன் கோயில் (Radha Madan Mohan Temple,), இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் மதுரா மாவட்டத்தின் தலைமையிடமான மதுரா நகரத்தில் உள்ள பிருந்தாவனத்தில் இராதை மற்றும் கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்துக் கோயில் ஆகும்.[1][2] இது பிருந்தாவனத்தின் பழமையான, மிகவும் மதிக்கப்படும் கோவில்களில் ஒன்றாகும்.[3]இக்கோயில் மூலவர் மதன் மோகன் எனும் கிருஷ்ணர், இராதை மற்றும் கோபியர்களுடன் காட்சி அளிக்கிறார்.[4][5]
விரைவான உண்மைகள் இராதா மதன் மோகன் கோயில், அமைவிடம் ...
இராதா மதன் மோகன் கோயில் | |
---|---|
இராதா மதன் மோகன் கோயில், பிருந்தாவனம் | |
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் கோயிலின் அமைவிடம் | |
அமைவிடம் | |
மாவட்டம்: | மதுரா |
அமைவு: | பிருந்தாவனம் |
ஆள்கூறுகள்: | 27.57976°N 77.69051°E / 27.57976; 77.69051 |
கோயில் தகவல்கள் |
மூடு
யமுனை ஆற்றின் கரையில் அமைந்த இராதா மதன் மோகன் கோயில், நாகரா கட்டிடக்கலை நயத்தில் கட்டப்பட்டுள்ளது. காளியன் படித்துறையில் அமைந்த இக்கோயிலின் உயரம் 50 அடி ஆகும்.[6]