தமிழக அரசியல்வாதி, கா. ந. அண்ணாதுரையின் மனைவி From Wikipedia, the free encyclopedia
இராணி அண்ணாதுரை (Rani Annadurai) தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கா. ந. அண்ணாதுரையின் மனைவியும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனரும் ஆவார். இவர் திருமுல்லைவாயில் என்ற ஊாில் பிறந்தார்.
ராணி அண்ணாதுரை | |
---|---|
தமிழ்நாடு சட்ட மேலவை உறுப்பினர் | |
பதவியில் 1969–1974 | |
முதலமைச்சர் | மு. கருணாநிதி |
முன்னையவர் | சி. என். அண்ணாதுரை |
இராணி 1930 ஆம் ஆண்டில் கா. ந. அண்ணாதுரையை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்தின் போது கா. ந. அண்ணாதுரை சென்னை பச்சையப்பா கல்லூரியில் மாணவராக இருந்தார். அவர்களுக்கு ஒரு பாரம்பரிய இந்து முறைப்படி திருமணம் இருந்தது.[1]
இராணி மற்றும் அண்ணாதுரைக்கு சொந்தமாக குழந்தைகள் இல்லை. இவர்கள் அண்ணாதுரையின் மூத்த சகோதரியின் குழந்தைகளை தத்தெடுத்து வளா்த்தனா். மேலும் அவரது சகோதரி இராஜாமணி அம்மாள் அவர்களுடன் வசித்து வந்ததோடு இவர்களது வீட்டையும் கவனித்து வந்தார். இராஜாமணி அம்மாளுக்கு நான்கு மகன்கள் இருந்தனர், அண்ணாதுரை தம்பதியினர் அவர்கள் அனைவரையும் தத்தெடுத்தனர்.[1]
அண்ணாதுரையின் பணி மற்றும் அரசியல் வாழ்க்கைக்கு இராணி மிகவும் உறுதுணையாக இருந்தார். ஆர். கண்ணன் எழுதிய சி. என். அண்ணாதுரை வாழ்க்கை வரலாற்றில், அவர் இரவில் தாமதமாக கண் விழித்துப் படிக்கும் போது அவரை ஒருபோதும் தொந்தரவு செய்ய மாட்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனெனில் அவரது பணி நாட்டின் சேவையில் உள்ளது என்பதை அவர் உணர்ந்திருந்தார். மேலும் இந்த ஆண்டில் 1937–40 இந்தி எதிர்ப்பு கிளர்ச்சியில் அவரது பங்கிற்காக அவர் 1938 இல் கைது செய்யப்பட்டபோது அவர் பயந்துபோன போதிலும் , அவர் அவரை அடிக்கடி சிறையில் சந்தித்தார்.[1]
அண்ணாதுரை தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆனபோது, தனது கடமைகளை மிகவும் திறமையாக நிறைவேற்ற தனது இல்லத்தில் ஒரு வீட்டு அலுவலகத்தை உருவாக்குவது அவசியம் என்று கருதினார். அரசாங்கம் அவரை அவ்வாறு வீட்டில் ஒரு அலுவலகத்தை வைத்துக்கொள்ள அனுமதித்தது. அப்போது, அவர் பெற்ற தளவாடங்களில் மெத்திருக்கைத் தொகுப்பொன்றும் இருந்தது. இராணி மெத்திருக்கைகளை அலுவலகத்தில் அல்லாமல் தனது வீட்டுப் பகுதியில் வைத்துக்கொள்ளவிரும்பினார். அலுவலகமானது வீட்டின் ஒரு பகுதியில் இருந்தாலும், அண்ணாதுரை இராணியின் விருப்பத்தை நிராகரித்தார்.[2]
அண்ணாதுரை இறந்த பிறகு, இராணி அன்னாதுரை தொடர்ந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளுடன் இணைந்தும் சுயேச்சையாகவும் தீவிர அரசியலில் இருந்தார்.[3] இவர் 1977 ஆம் ஆண்டில் பெங்களூர் வடக்கு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். இவர் 924 வாக்குகளை மற்றும் பெற்று இந்திய தேசிய காங்கிரசு கட்சி வேட்பாளரிடம் தோற்றுப்போனார்.[4]
அவர் பல கலாச்சார நடவடிக்கைகளிலும் பங்கேற்றார். 1969ஆம் ஆண்டில் தமிழ் இசைச் சங்கத்தால் கௌரவிக்கப்பட்டார்.[5]
இராணி அண்ணாதுரை 1996 ஆம் ஆண்டு மே 6 அன்று தனது 82 வயதில் சென்னையில் இறந்தார்.[6]
இராணி அண்ணாதுரையை கௌரவிக்கும் விதமாக சென்னையின் மந்தைவெளியில் உள்ள ஒரு சாலைக்கு இராணி அண்ணாதுரை சாலை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.[7]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.