இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம்
From Wikipedia, the free encyclopedia
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் (Second Vatican Council; Vatican II) என்பது இருபதாம் நூற்றாண்டுக் கத்தோலிக்க திருச்சபையில் நடந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஒரு நிகழ்வு ஆகும்[1]. இப்பொதுச்சங்கம் 1962ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் நாளிலிருந்து 1965ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் நாள்வரை நடந்தேறியது.
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் | |
---|---|
காலம் | அக்டோபர் 11, 1962 முதல் டிசம்பர் 8, 1965 வரை |
ஏற்கும் சபை | கத்தோலிக்க திருச்சபை |
முந்திய சங்கம் | முதலாம் வத்திக்கான் சங்கம் (1869-1870) |
அடுத்த சங்கம் | இல்லை |
சங்கத்தைக் கூட்டியவர் | திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் |
தலைமை | திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் திருத்தந்தை ஆறாம் பவுல் |
பங்கேற்றோர் | கத்தோலிக்க சபை ஆயர்கள் 2625 பேர் வரை |
ஆய்ந்த பொருள்கள் | திருச்சபையின் இயல்பு; திருச்சபைக்கும் உலகுக்கும் உள்ள உறவு; கிறித்தவ ஒன்றிப்பு; பல்சமய உரையாடல், முதலியன |
வெளியிட்ட ஏடுகள்/அறிக்கைகள் | 4 கொள்கைத் திரட்டுகள், 9 விதித் தொகுப்புகள், 3 அறிக்கைகள்
|
பொதுச்சங்கங்களின் வரலாற்றுக் கால வரிசை |
திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் (ஆட்சி:1958-1963) இச்சங்கத்தைக் கூட்டி அதன் முதல் அமர்வுக்குத் தலைமை தாங்கினார்[2]. அவரது இறப்புக்குப் பின் திருத்தந்தை ஆறாம் பவுல் (ஆட்சி:1963-1978) சங்கத்தைத் தொடர்ந்து நடத்தி, தலைமைதாங்கி, அதை நிறைவுக்குக் கொணர்ந்தார்[3].
கத்தோலிக்க திருச்சபையில் நடந்த பொதுச்சங்கங்களுள் இப்பொதுச்சங்கம் 21ஆவதாகக் கருதப்படுகிறது. இதற்கு முன் வத்திக்கான் நகரில் 1869-1870இல் நடந்த பொதுச்சங்கம் முதலாம் வத்திக்கான் பொதுச்சங்கம் என்று அழைக்கப்படுகிறது.