![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a1/Chola_flag.png/640px-Chola_flag.png&w=640&q=50)
இரண்டாம் குலோத்துங்க சோழன்
சோழ மன்னர் / From Wikipedia, the free encyclopedia
இரண்டாம் குலோத்துங்கன், விக்கிரம சோழனின் மகனாவான்.[1] இவரது அவைக்களப் புலவர்களில் கம்பரும் ஒருவர். இரண்டாம் குலோத்துங்கனைத் தம் உரிமைத் திருமகனாக அவனுடைய தகப்பனார் விக்கிரம சோழன் பொ.ஊ. 1133ம் ஆண்டு மே மாதத்திற்கும் சூன் இடையில் முடிவு செய்திருக்க வேண்டும். இந்தத் தேதி தான் அவனுடைய ஆட்சியின் தொடக்கமாக அவன் கல்வெட்டுகளில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன் பிறகு ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்கு விக்கிரம சோழனின் ஆட்சி தொடர்ந்து நடைபெற்றது. அவனுடைய கல்வெட்டுக்களின் மெய்க்கீர்த்திகளில் பலவகை வாசகங்கள் உள்ளன. அவை எல்லாம் ஆட்சியின் மாட்சியைச் சொல் அலங்காரமாகக் கூறுகின்றன. ஆனால் மருந்திற்குக்கூட வரலாற்று முறையில் பயன்படக்கூடிய உண்மையான செய்தி ஒன்று கூட இடம்பெறவில்லை.
விரைவான உண்மைகள்
{{{map}}} {{{caption}}} | |
ஆட்சிக்காலம் | பொ.ஊ. 1133-1150 |
பட்டம் | கோப்பரகேசரி வர்மன் |
தலைநகரம் | கங்கைகொண்ட சோழபுரம் |
அரசி | |
பிள்ளைகள் | இரண்டாம் இராசராச சோழன் |
முன்னவன் | விக்கிரம சோழன் |
பின்னவன் | இரண்டாம் இராசராச சோழன் |
தந்தை | விக்கிரம சோழன் |
பிறப்பு | கங்கை கொண்ட சோழபுரம் |
இறப்பு | சிதம்பரம் |
மூடு