கம்பர்
தமிழ் புலவர் / From Wikipedia, the free encyclopedia
கம்பர் (பொ.ஊ. 1180–1250) என்பவர் தமிழ்க் கவிஞரும், நூலாசிரியரும் ஆவார். இவர் இயற்றித் தலைப்பிட்ட நூலுக்கு 'இராமாவதாரம்' என்று பெயரிட்டார். பிற்காலத்தில் அது கம்பராமாயணம் என அழைக்கப்பட்டது. கம்பராமாயணம் கம்பராமாயணத்தினை படித்த பலரும் கம்பரின் கவித்திறனைப் பாராட்டியுள்ளார்கள். கம்பருக்கு "கல்வியிற் பெரியோன் கம்பன்", "கவிச்சக்ரவர்த்தி" போன்ற பட்டங்களை சூட்டியுள்ளனர். கம்பரின் கவித்திறனால், "கம்பன் வீட்டு கட்டுத் தறியும் கவி பாடும்" என்ற முதுமொழி தமிழில் உள்ளது. தமிழ் இலக்கியத்தில் கம்ப இராமாயணமே மிகப்பெரிய இதிகாசம் எனக் கருதப்படுகிறது.
விரைவான உண்மைகள் பிறப்பு, இறப்பு ...
பிறப்பு | பொ.ஊ. 1180 திருவழுந்தூர், மயிலாடுதுறை அருகில், மயிலாடுதுறை மாவட்டம், இந்தியா |
---|---|
இறப்பு | பொ.ஊ. 1250 |
தொழில் | புலவர் |
காலம் | பொ.ஊ. 12ஆம் நூற்றாண்டு |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | கம்பராமாயணம் |
மூடு