இரண்டாம் அர்தசெராக்சஸ்
From Wikipedia, the free encyclopedia
இரண்டாம் அர்தசெராக்சஸ் (Artaxerxes II) பாரசீகத்தின் (தற்கால ஈரான்) அகாமனிசியப் பேரரசை கிமு 405 முதல் கிமு 358 முடிய ஆண்ட பேரரசர் ஆவார். இவர் அகாமனிசியப் பேரரசர் இரண்டாம் டேரியசின் மகன் ஆவார். இவருக்குப் பின்னர் அகாமனிசியப் பேரரசை ஆண்டவர் மூன்றாம் அர்தசெராக்சஸ் ஆவார். இவர் சொரோஷ்டிரிய சமயத்தை பின்பற்றினார். இவரது கல்லறை தற்கால ஈரானின் பெர்சேபோலிஸ் நகரத்தில் உள்ளது.
இரண்டாம் அர்தசெராக்சஸ் 𐎠𐎼𐎫𐎧𐏁𐏂 | |
---|---|
பாரசீகப் பேரரசர் | |
மன்னர்களின் மன்னர் அகாமனிசியப் பேரரசர் | |
ஆட்சிக்காலம் | கிமு 405/358 |
முன்னையவர் | இரண்டாம் டேரியஸ் |
பின்னையவர் | மூன்றாம் அர்தசெராக்சஸ் |
பிறப்பு | கிமு 453/445 |
இறப்பு | கிமு 358 (வயது 86 அல்லது 94) |
புதைத்த இடம் | |
இராணி | ஸ்டேடிரா |
குழந்தைகளின் பெயர்கள் | மூன்றாம் அர்தசெராக்சஸ் டேரியஸ் |
அரசமரபு | அகாமனிசிய வம்சம் |
தந்தை | இரண்டாம் டேரியஸ் |
தாய் | பரிசதிஸ் |
மதம் | சொரோஷ்டிரிய சமயம் |
இரண்டாம் அர்தசெராக்சஸ் பதவியேற்ற சிறிது காலத்திலேயே, அவரது தம்பி இளைய சைரஸ் கிரேக்கர்களுடன் கூட்டு சேர்ந்து தனிப்படை அமைத்து, அகாமனிசியப் பேரரசின் அரியணை ஏற கிமு 401-இல் போரிட்டார். போரில் இளைய சைரஸ் மாண்டார். இதனால் இரண்டாம் அர்தசெராக்சசிற்கு எதிராக கிமு 391-380களில் சைப்பிரஸ் மற்றும் போனீசியாவில் (கிமு 380) கிளர்ச்சிகள் ஏற்பட்டது. மேலும் மேற்கு சத்திரபதிகளும் இரண்டாம் அர்தசெராக்சசிற்கு எதிராக கிளர்ச்சிகள் செய்தனர். பார்த்தியப் பேரரசினர் இரண்டாம் அர்தசெராகசை தங்கள் முன்னோடியாக கருதினர்.