இந்துஸ்தானி இசை
From Wikipedia, the free encyclopedia
இந்துத்தானி இசை (Hindustani music) என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் வடக்குப் பகுதிகளின் ஒரு பாரம்பரிய இசை ஆகும். இது வட இந்திய செவ்விய இசை அல்லது பாரதிய சாத்திரிய சங்கீதம் என்றும் அழைக்கப்படுகிறது.[1] இது வீணை, சித்தார், சரோது போன்ற இசைக்கருவிகளால் இசைக்கப்படுகிறது. இது தென்னிந்தியாவின் பாரம்பரிய கருநாடக இசையிலிருந்து விலகி, பொ.ஊ 12-ஆம் நூற்றாண்டில் உருவானது. கருநாடக இசை பெரும்பாலும் சமசுகிருதம், தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட பாடல்களைப் பயன்படுத்துகிறது. இந்துஸ்தானி இசை பெரும்பாலும் இந்தி, உருது, பிராச், அவதி, போச்புரி, இராசத்தானி, பஞ்சாபி மொழிகளில் எழுதப்பட்ட பாடல்களைப் பயன்படுத்துகிறது.[2]
இந்துத்தானி பாரம்பரிய இசை பற்றிய அறிவு கரானா எனப்படும் பாரம்பரிய இசைப் பள்ளிகள் மூலம் கற்பிக்கப்படுகிறது. பிசுமில்லா கான், பீம்சேன் சோசி, ரவி சங்கர் உள்ளிட்ட இந்துத்தானி இசைக் கலைஞர்கள் கலைகளுக்கு அவர்கள் செய்த பங்களிப்புகளுக்காக இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது பெற்றுள்ளனர்.[3]