இந்தியத் தலைமை நீதிபதி
From Wikipedia, the free encyclopedia
இந்தியத் தலைமை நீதிபதி (Chief Justice of India) என்பது இந்திய உச்ச நீதிமன்றத்தின் மிக உயர்ந்த நீதிபதிப் பதவியாகும். உயர்ந்த நீதிபரிபாலணம் கொண்ட பதவியும் ஆகும். தற்போதைய இந்தியத் தலைமை நீதிபதியாக நீதியரசர் தனஞ்சய யஷ்வந்த் சந்திரசூட் என்பவர் நவம்பர் 9, 2022 முதல் பதவியில் உள்ளார். இவர் இப்பதவியை வகிக்கும் 50 ஆவது தலைமை நீதிபதியாவார்.[5]
தலைமை நீதிபதி | |
---|---|
இந்திய உச்ச நீதிமன்ற சின்னம் | |
உச்ச நீதிமன்றம் | |
சுருக்கம் | CJI |
வாழுமிடம் | 5, கிருஷ்ண மேனன் மார்க், சுனேரி பாக், புது தில்லி, இந்தியா[1] |
அலுவலகம் | இந்திய உச்ச நீதிமன்றம், புது தில்லி, இந்தியா |
பரிந்துரையாளர் | மூத்தவர் என்பதன் அடிப்படையில் பதவி விலகும் இந்திய தலைமை நீதிபதி |
நியமிப்பவர் | இந்தியக் குடியரசுத் தலைவர் |
பதவிக் காலம் | 65 வயது வரை[2] |
அரசமைப்புக் கருவி | இந்திய அரசியலமைப்பு (பிரிவு 124 இன் கீழ்) |
உருவாக்கம் | 1950; 74 ஆண்டுகளுக்கு முன்னர் (1950) |
முதலாமவர் | எச். ஜே. கனியா (1950–1951)[3] |
ஊதியம் | ₹2,80,000 (US$3,500) (மாதம்)[4] |
இணையதளம் | Supreme Court of India |
தலைமை நீதிபதி பணி உச்ச நீதிமன்றத்தை நிர்வகிக்கும் பொறுப்பு மட்டும் அல்லாமல் அதன் அமர்வுகளில் பங்கேற்று நீதிபரிபாலணத்தை நிலைநிறுத்தும் கடமையையும் உள்ளடக்கியதாகும்.[6]
நிர்வாக முறையில் தலைமை நீதிபதியால் நிறைவேற்றப்படும் கடமைகள்.
- வழக்கின் தன்மைக்கு ஏற்றவாறு நீதிபதிகளை நியமிக்கும் கடமை கொண்டவர்.
- வருகையை கண்காணிக்க வேண்டும்.
- நீதிமன்ற அலுவலர்களை நியமிக்கவேண்டும்.
- பொதுவான மற்றும் இதர உச்ச நீதிமன்றம் தொய்வின்றி செயல்படுவதற்கு இன்றியமையாத மேற்பார்வை சம்பந்தமான செயல்களிலும் அவர் ஈடுபடவேண்டும்.
வழக்குகளை தரம் பிரித்து அதன் தன்மைகளுக்கு ஏற்ப அமர்வுகளை தலைமை நீதிபதி தீர்மானிக்கின்றார். இது இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி உச்சநீதிமன்றத்தின் விதி 145, 1966இன் படி அவருக்கு வழங்கப்பட்ட அதிகாரமாகும். இந்த அதிகாரத்தின்படி இதர நீதிபதிகளின் அமர்வு மற்றும் பணிகளை நிர்ணயிக்க அவருக்கு உரிமையளிக்கின்றது.