இட்லர்
From Wikipedia, the free encyclopedia
அடால்ஃப் ஹிட்லர் (Adolf Hitler, ஏப்ரல் 20, 1889- ஏப்ரல் 30 ,1945) ஜெர்மனியின் நாசிக் கட்சியின் தலைவராக விளங்கியவர். அவர் 1933-ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டின் சான்சலராக நியமிக்கப்பட்டார். பின்பு 1934-ஆம் ஆண்டு, ஜெர்மனி நாட்டின் தலைவரானார்.1945-ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ந் தேதியன்று தற்கொலை செய்து கொண்டது வரை அவர் அப்பதவியில் தொடர்ந்தார். ஜெர்மனி நாட்டின் ஃபியூரர் என அழைக்கப்பட்டார். இரண்டாம் உலகப்போரின் இறுதியில் ஸ்டாலினின் செம்படைகளிடம் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் இட்லரின் நாசிப்படைகள் வீழ்ச்சியுற்றன. அப்படைகள் அவரை நெருங்குவதற்கு முன் தன் கைத்துப்பாக்கியால்[2] சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார் என்று பதிவேடுகள் கூறுகின்றன. அவரோடு அவர் மனைவி இவா பிரானும் தற்கொலை செய்து கொண்டார் என்றும் கூறப்படுகின்றது.
விரைவான உண்மைகள் அடால்ஃப் ஹிட்லர், ஜெர்மனியின் தலைவர் ஃபியூரர் ...
அடால்ஃப் ஹிட்லர் | |
---|---|
ஜெர்மனியின் தலைவர் ஃபியூரர் | |
பதவியில் ஆகஸ்ட் 2, 1934 – ஏப்ரல் 30, 1945 | |
முன்னையவர் | போல் வொன் ஹிண்டன்பூர்க் (தலைவராக) |
பின்னவர் | கார்ல் டோனிட்ஸ் (தலைவராக) |
ஜெர்மனியின் வேந்தர் Chancellor of Germany | |
பதவியில் ஜனவரி 30, 1933 – ஏப்ரல் 30, 1945 | |
முன்னையவர் | கூர்ட் வொன் சிலெயிச்சர் |
பின்னவர் | ஜோசப் கோபெல்ஸ் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1889-04-20)ஏப்ரல் 20, 1889 ஆஸ்திரியா-ஹங்கேரி |
இறப்பு | ஏப்ரல் 30, 1945(1945-04-30) (அகவை 56) பெர்லின், ஜெர்மனி |
குடியுரிமை | ஆஸ்திரியர் (1889–1932) ஜெர்மனியர் (1932–1946) |
தேசியம் | 1929 வரையில் ஆஸ்திரியர்;[1] 1932 முதல் ஜெர்மனியர் |
அரசியல் கட்சி | தேசிய சோசலிச ஜெர்மன் தொழிலாளர் கட்சி (NSDAP) |
துணைவர்(கள்) | இவா பிரான் (ஏப்ரல் 29, 1945 இல் திருமணம்) |
வேலை | அரசியல்வாதி, சிப்பாய், ஓவியர், எழுத்தாளர், சர்வாதிகாரி |
கையெழுத்து | |
மூடு