ஆசீவகம்
மெய்யியல் கொள்கை / From Wikipedia, the free encyclopedia
ஆசீவகம் (Ājīvika) என்பது ஒரு இந்திய மெய்யியல் கொள்கையும், துறவு வாழ்க்கையும் ஆகும்.[2][3][4] இது பொ.ஊ.மு. 6 ஆம் நூற்றாண்டில் புத்தர், மகாவீரர் ஆகியோருக்கு சமகாலத்தில் வாழ்ந்த மற்கலி கோசாலர் என்பவர் உருவாக்கிய ஒரு சமய நெறியாகும்.[5][6][7][8] இந்த ஆசீவக மெய்யியல் பற்றிய நூல்கள் கிடைக்கவில்லை. ஆயினும் பௌத்தம், சைனம் போன்ற சமய நூல்களில் இருந்தும், பிற தொல்பொருளியல் நூல்களிலிருந்தும் ஆசிவக தத்துவங்கள் பற்றிய சில கருத்துக்களை அறியமுடிகிறது.[9][10] ஆசிவகம் ஊழ்வினையை அதிகம் வலியுறுத்துகிறது.[11]