அல் காயிதா
From Wikipedia, the free encyclopedia
அல்-காய்தா
அல் காய்தா القاعدة | |
---|---|
தலைவர் | அய்மன் அல் ழவாகிரி |
நிறுவனர் | ஒசாமா பின் லாடன் |
தொடக்கம் | 1988 |
உறுப்பினர் | தெரியாது |
பன்னாட்டு சார்பு | ஆப்கானிஸ்தான், ஈராக், பாகிசுத்தான், சோமாலியா, ஏமன் மற்றும் உலகமுழுவதும் |
அல்-காய்தா ஜிகாத் கொள்கையுடைய பன்னாட்டு சுணி முஸ்லிம் ஆயுதக்குழுக்களின் ஒன்றியமாகும். இவ்வியக்கம் 1989 ஆம் ஆண்டில் அப்கானிதானில் இருந்து சோவியத் படைகள் வாபஸ் பெற்ற காலத்தில் ஒசாமா பின் லாடன் மற்றும் சிலரால் பாகிஸ்தானின் பெஷாவரில் 1988 ஆகத்து மாதத்துக்கும் 1989ஆம் ஆண்டுகடைசிக்கும் இடையில் தொடக்கப்பட்டதாகும். [1] முஸ்லிம் நாடுகள் மீதான வெளிநாட்டு பாதிப்புகளைக் இல்லாதொழித்து முகமது நபியின் காலத்தை ஒத்த ஒரு தலைவருக்குக் கீழான இசுலாமிய இராச்சியத்தை உருவாகுதல் அல்-காய்தாவின் முக்கியக் கொள்கைகளில் ஒன்றகும்.உலகின் பல்வேறு நாடுகளில் மக்களின் மீதும் ராணுவத்தின் மீதும் தாக்குதல்களைத் தொடுத்துள்ளது.
அல்-காய்தா பல உலக நாடுகளிலும் பன்னாட்டு நிறுவனங்களாலும் பயங்கரவாத அமைப்பாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. இவற்றுள் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை,[2] நேட்டோ,[3][4] ஐரோப்பிய ஒன்றியம்,[5] ஐக்கிய அமெரிக்க நாடுகள்,[6] அவுஸ்திரேலியா,[7] கனடா,[8] இசுரேல்,[9] யப்பான்,[10] the நெதர்லாந்து,[11] ஐக்கிய இராச்சியம்,[12] ரஷ்யா,[13] சுவீடன்,[14] சுவிட்சர்லாந்து[15] என்பவை முக்கியமானவையாகும். அல்-காய்தா உறுப்பினர்கள் உலகின் பல நாடுகளிலும் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். இவற்றுள் செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள் முக்கியமானவையாகும். செப்டம்பர் 11 தாக்குதல்களுக்குப் பிறகு ஐக்கிய அமெரிக்க அரசு அல் கைதாவுக்கு எதிராக பாரிய புலனாய்வு மற்றும் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.