![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/ta/thumb/a/a5/%25E0%25AE%2585%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25B3%25E0%25AF%258D_%25E0%25AE%259A%25E0%25AF%2586%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%25B5%25E0%25AE%25A8%25E0%25AE%25BE%25E0%25AE%25AF%25E0%25AE%2595%25E0%25AE%25AE%25E0%25AF%258D.jpg/640px-%25E0%25AE%2585%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25B3%25E0%25AF%258D_%25E0%25AE%259A%25E0%25AF%2586%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%25B5%25E0%25AE%25A8%25E0%25AE%25BE%25E0%25AE%25AF%25E0%25AE%2595%25E0%25AE%25AE%25E0%25AF%258D.jpg&w=640&q=50)
அருள் செல்வநாயகம்
From Wikipedia, the free encyclopedia
அருள் செல்வநாயகம் (சூன் 6, 1926 - செப்டம்பர் 2, 1973) வரலாற்றுச் சிறுகதைகள், நாவல்கள் மற்றும் நாடகங்கள், கட்டுரைகள் எழுதிய ஈழத்து எழுத்தாளர். இவரது முதற் சிறுகதையான 'விதியின் கொடுமை' 1946 இல் மின்னொளி என்ற சஞ்சிகையில் வெளிவந்தது. பின்னர் இவரது சிறுகதைகள் கலைமகள், அமுதசுரபி, காவேரி, உமா, கல்கி போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன. திருவருட் செல்வம், ரி.டி.எஸ். வழிகாட்டி, குருசெல்வம், செல்வா, ரி. டி. செல்வநாயகம், குபேரன் ஆகிய புனைபெயர்களிலும் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதினார்.
விரைவான உண்மைகள் அருள் செல்வநாயகம், பிறப்பு ...
அருள் செல்வநாயகம் | |
---|---|
![]() | |
பிறப்பு | சூன் 6, 1926 குருமண்வெளி, மட்டக்களப்பு |
இறப்பு | செப்டம்பர் 2, 1973(1973-09-02) (அகவை 47) |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அறியப்படுவது | ஈழத்து எழுத்தாளர் |
பெற்றோர் | தம்பாய்பிள்ளை, வள்ளியம்மை |
மூடு