அருச்சுனா விருது
From Wikipedia, the free encyclopedia
அருச்சுனா விருது 1961ஆம் ஆண்டு இந்திய அரசினால் தேசிய அளவில் விளையாட்டுத் துறைகளில் சிறந்த சாதனைகளைப் படைக்கும் வீரர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் நிறுவப்பட்டது. இவ்விருது பெற்றோருக்கு தொன்மவியலில் வில்விளையாட்டில் சிறப்பாக கருதப்படும் அருச்சுனனின் வெங்கலச்சிலையோடு, இந்திய ரூபாய்கள் 15,00,000 மற்றும் பாராட்டுச் சுருள் கொடுக்கப்படுகிறது.
அருச்சுனா விருது | ||
விருது குறித்தத் தகவல் | ||
---|---|---|
வகை | குடியியல் விருது | |
பகுப்பு | விளையாட்டு (தனிநபர்) | |
நிறுவியது | 1961 | |
முதலில் வழங்கப்பட்டது | 1961 | |
கடைசியாக வழங்கப்பட்டது | 2021 | |
வழங்கப்பட்டது | இந்திய அரசு | |
நிதிப் பரிசு | ₹15 இலட்சம் (US$19,000) | |
விருது தரவரிசை | ||
மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது ← அருச்சுனா விருது → ஏதுமில்லை |
1991 ஆம் ஆண்டு கேல் ரத்னா விருதுகள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்புவரை அருச்சுனா விருதே விளையாட்டு துறையில் இந்தியாவின் உயரிய விருதாக போற்றப்பட்டது.
கடந்த ஆண்டுகளில் இவ்விருதின் செயல்வீச்சு அருச்சுனா விருது துவங்கப்பட்ட காலத்திற்கு முற்பட்ட விளையாட்டு வீரர்களுக்கும் விரிவாக்கப்பட்டுள்ளது. தவிர, விருது வழங்கப்படும் துறைகளும் விரிவாக்கப்பட்டு இந்திய பரம்பரை விளையாட்டுகளும் உடல் நலிவடைந்தோருக்குமான விளையாட்டுகளும் சேர்க்கப்பட்டன.
2001ஆம் ஆண்டிலிருந்து இந்த விருது கீழ்கண்ட வகைகளில் பல்வேறு துறைகளுக்கு வழங்கப்படுகின்றன:
- ஒலிம்பிக் விளையாட்டுகள் / ஆசிய விளையாட்டுகள் / பொதுநலவாய நாடுகள் விளையாட்டுகள் / உலக கோப்பை / உலக சாதனையாளர் துறைகள் மற்றும் துடுப்பாட்டம்
- இந்திய பரம்பரை விளையாட்டுகள்
- உடல் நலிவடைந்தோர் விளையாட்டுகள்