அரசு மகளிர் கல்லூரி, (நவகடல், சிறிநகர்)
From Wikipedia, the free encyclopedia
அரசு மகளிர் கல்லூரி (நவகடல் சிறிநகர்), என்பது காசுமீரின் சிலம் ஆற்றின் தென்கரையில் 1961 ஆம் ஆண்டில் கல்வியின் மூலம் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் நோக்கத்துக்காக நிறுவப்பட்ட மகளிர் கல்லூரியாகும்.
விரைவான உண்மைகள் வகை, உருவாக்கம் ...
گورنمنٹ کالج خواتین سرینگر | |
வகை | அரசு இளங்கலை மகளிர் கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 1961; 63 ஆண்டுகளுக்கு முன்னர் (1961) |
சார்பு | காசுமீர் பல்கலைக்கழகம் |
தரநிர்ணயம் | பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா), தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை |
துணை வேந்தர் | தலாத் அகமது |
முதல்வர் | முனைவர் முகமது பாரூக் மிர் |
அமைவிடம் | , , 190002 34°05′36″N 74°47′51″E |
வளாகம் | நகர்ப்புறம் |
மொழி | ஆங்கிலம், உருது, இந்தி, அரபு, பாரசீகம் மற்றும் காஷ்மீரி |
நிறங்கள் | |
இணையதளம் | gcwnk |
மூடு
காசுமீர் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள இக்கல்லூரியானது பல்கலைக்கழக மானியக் குழுவின் சட்டப்பிரிவு 2பி மற்றும் 12எஃப் கீழ் அங்கீகரிக்கப்பட்ட இளங்கலைக் கல்லூரியாகும். காசுமீர் பள்ளத்தாக்கில் வணிகம் மற்றும் மேலாண்மை படிப்புகளை வழங்கும் ஒரே மகளிர் கல்வி நிறுவனம் இதுவாகும்.[1]
இக்கல்லூரியானது தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையால் 'ஏ' தரம் வழங்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. [2]