அமைதிக்கான நோபல் பரிசு
From Wikipedia, the free encyclopedia
அமைதிக்கான நோபல் பரிசு சுவீடனின் வேதியியல் ஆராய்ச்சியாளரும் தொழிலதிபருமான ஆல்ஃபிரட் நோபெல் (Alfred Nobel)அவர்களால் நிறுவப்பட்ட ஐந்து நோபெல் பரிசுகளில் ஒன்றாகும். அவரது உயிலின்படி அமைதிக்கான பரிசு "யாரொருவர் நாடுகளினிடையே சகோதரத்துவத்தை வளர்க்க சிறந்த முயற்சி எடுப்பவரோ, நிலவும் இராணுவத்தினை நீக்கவோ அல்லது குறைக்கவோ முயற்சி எடுத்தவரோ, அமைதி மாநாடுகள் நிகழ காரணமாக இருக்கிறாரோ" அவருக்குக் கொடுக்கப்பட வேண்டும்[1].
நோபல் அமைதிப் பரிசு Nobel Peace Prize | |
---|---|
விளக்கம் | அமைதிக்காகப் பங்களிப்பு வழங்கியமை |
Location | ஒஸ்லோ, நோர்வே |
வழங்குபவர் | நோர்வே நோபல் குழு |
முதலில் வழங்கப்பட்டது | 1901 |
இணையதளம் | Nobelprize.org |
ஆல்ஃபிரட் நோபெலின் உயிலின்படி இப்பரிசை நார்வேயின் நாடாளுமன்றம் தேர்ந்தெடுத்த ஐவர் குழு கொடுக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் நோபெலின் நினைவு நாளான திசம்பர் 10 அன்று நார்வே தலைநகர் ஓசுலோவில் நார்வே நாட்டு மன்னர் முன்னணியில் இப்பரிசு வழங்கப்படுகிறது. மற்ற நான்கு பரிசுகள் சுவீடனின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் வழங்கப்படும்போது இப்பரிசு மட்டுமே நார்வேயில் வழங்கப்படுகிறது. நோபெல் பரிந்துரை குழுவின் தலைவரிடமிருந்து நோபெல் பரிசு பெறுபவருக்கு ஒரு பட்டயம்,ஒரு பதக்கம் மற்றும் பரிசுப்பணத்தை உறுதிசெய்யும் ஆவணமும் வழங்கப்படுகிறது.