![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/df/Afsharid_Imperial_Standard_%25283_Stripes%2529.svg/langta-640px-Afsharid_Imperial_Standard_%25283_Stripes%2529.svg.png&w=640&q=50)
அப்சரித்து வம்சம்
From Wikipedia, the free encyclopedia
அப்சரித்து வம்சம் (Afsharid dynasty (பாரசீக மொழி: افشاریان) இவ்வம்சத்தினர் பாரசீகத்தின் வடகிழக்கில் வாழ்ந்த துருக்கிய பழங்குடி அப்சரித்து இன மக்கள் ஆவார். இராணுவ வலிமை படைத்த அப்சரித்து வம்சத்தினர் பாரசீகத்தில், பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், கிபி 1736ல் நாதிர் ஷா என்ற படைத்தலைவர் தலைமையில், சபாவித்து வம்சத்தின் இறுதி மன்னரை வென்று, தன்னை ஈரானின் மன்னராக அறிவித்துக் கொண்டார்.[5] அப்சரித்து வம்சத்தினர் ஈரானை கிபி 1736 முதல் 1796 முடிய அறுபது ஆண்டுகள் ஆட்சி செய்தனர். அப்சரித்து வம்சத்தினருக்குப் பின் குவாஜர் வம்சத்தினர் ஈரானை ஆண்டனர்.
அப்சரித்து வம்சம் افشاریان Afshâryan | |||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1736–1796 | |||||||||||||||||
![]() நாதிர் ஷாவின் ஆட்சிக் காலத்தில் 1741 - 1743ல் அப்சரித்து பேரரசின் வரைபடம் | |||||||||||||||||
நிலை | பேரரசு | ||||||||||||||||
தலைநகரம் | மசுகது | ||||||||||||||||
பேசப்படும் மொழிகள் |
| ||||||||||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||||||||||
ஷா | |||||||||||||||||
• 1736–1747 | நாதிர் ஷா | ||||||||||||||||
• 1747–1748 | அடில் ஷா | ||||||||||||||||
• 1748 | இப்ராகிம் அப்சர் | ||||||||||||||||
• 1748–1796 | சாரூக் அப்சர் | ||||||||||||||||
வரலாறு | |||||||||||||||||
• தொடக்கம் | 22 சனவரி 1736 | ||||||||||||||||
• முடிவு | 1796 | ||||||||||||||||
நாணயம் | ஈரானிய தோமன் [4] | ||||||||||||||||
|
பாரசீக அப்சரித்து வம்சத்தின் மன்னர் நாதிர் ஷாவின் ஆட்சிப் பரப்பில் தற்கால ஈரான் உள்ளிட்ட ஆர்மீனியா, ஜார்ஜியா, அசர்பைஜான், உஸ்பெகிஸ்தான், துருக்மெனிஸ்தான் வடக்கு காக்கேசியாப் பகுதிகள், பகுரைன், ஓமன், ஈராக்கின் பகுதிகள், ஆப்கானித்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகள் இருந்தது.
அப்சரித்து வம்சத்தின் நாதிர் ஷாவின் மறைவிற்குப் பின்னர் அவரது பேரரசு சந்த் இராச்சியம், துராணி இராச்சியம், கர்டிலி-காகேத்தி எனும் ஜார்ஜியா மற்றும் காக்கேசியா கானகங்கள் எனப் பலவாகச் சிதறுண்டது. அதனால் அப்சரித்து வம்சத்தினர் தங்கள் இறுதிக் காலத்தில் பாரசீகத்தின் வடகிழக்கில் அமைந்த குராசான் என்று குறுகிய பகுதியை மட்டும் ஆட்சி செய்தனர்.
இறுதியாக குவாஜர் வம்சத்தின் முகமது கான் குவாஜர் என்பவர் 1796ல் அப்சரித்து வம்சத்தின் ஆட்சியை முற்றிலுமாக ஈரானிலிருந்து அகற்றி பாரசீகப் பேரரசை நிறுவினார்.