அபுல் கலாம் ஆசாத்
இந்திய விடுதலைப் போராட்டத் தில்லியர் / From Wikipedia, the free encyclopedia
மௌலானா அபுல் கலாம் முகியுத்தின் அகமது (11 நவம்பர் 1888 – 22 பெப்ரவரி 1958) (Abul Kalam Muhiyuddin Ahmed, வங்காள மொழி: আবুল কালাম মুহিয়ুদ্দিন আহমেদ আজাদ, உருது: مولانا ابوالکلام محی الدین احمد آزاد) இந்திய விடுதலை இயக்கத்தின் மூத்த அரசியல் தலைவரும் இந்திய முசுலிம் அறிஞரும் ஆவார். சமய அடிப்படையிலான இந்தியப் பிரிவினையை எதிர்த்து இந்து- முசுலிம் ஒற்றுமையை வலியுறுத்திய முசுலிம் தலைவர்களில் முதன்மையானவர். இந்தியா விடுதலையடைந்த பிறகு அமைந்த முதல் இந்திய அரசில் கல்வி அமைச்சராகப் பணியாற்றியவர். பாக்கித்தான் பிரிவினையையும் அங்கு இராணுவ ஆட்சி ஏற்படப்போவதையும் முன்னரே தெரிவித்த பெருமை உடையவர்.[1] பரவலாக இவர் மௌலானா ஆசாத்என அறியப்படுகிறார்; ஆசாத் (விடுதலை) என்பது இவர் வைத்துக்கொண்ட புனைப்பெயராகும்.
விரைவான உண்மைகள் மௌலானா அபுல் கலாம் ஆசாத், கல்வி அமைச்சர் ...
மௌலானா அபுல் கலாம் ஆசாத் | |
---|---|
கல்வி அமைச்சர் | |
பதவியில் 15 ஆகத்து 1947 – 1958 | |
பிரதமர் | ஜவஹர்லால் நேரு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 200px (1888-11-11)11 நவம்பர் 1888 மக்கா |
இறப்பு | 22 பெப்ரவரி 1958(1958-02-22) (அகவை 69) தில்லி, இந்தியா |
இளைப்பாறுமிடம் | 200px |
பெற்றோர் |
|
கையெழுத்து | |
மூடு