அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம்
From Wikipedia, the free encyclopedia
அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் (All India Institute of Medical Sciences, AIIMS), எய்ம்சு தன்னாட்சி பெற்ற பொதுத்துறை உயர்கல்வி மருத்துவக் கல்லூரிக் குழுமம் ஆகும். இந்த மருத்துவமனைகள் நாடாளுமன்ற சட்டத்தின்படி தேசிய முதன்மைக் கழகங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.[1] இவற்றின் முன்னோடியான அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் புது தில்லி, இந்தியாவில் உள்ள மிக முக்கியமான மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையாகும். இக்கழகம், 1956 - ஆம் ஆண்டு நியூசிலாந்து அரசாங்கத்தால் கொடுக்கப்பட்ட உதவித்தொகையில் கட்டப்பட்டது. இம்மையம், தில்லியின் தென்பகுதியில் உள்ள அன்சாரி நகரில் உள்ளது[2].