அண்டோனியோ கிராம்ஷி
From Wikipedia, the free encyclopedia
அண்டோனியோ கிராம்ஷி [Antonio Gramsciⓘ[1]; 22 சனவரி 1891 - ஏப்ரல் 27, 1937] [தொடர்பிழந்த இணைப்பு] ஒரு இத்தாலிய எழுத்தாளர், அரசியல்வாதி, அரசியல் நிபுணர், தத்துவவாதி, சமூகவியல், மற்றும் மொழியியலாளர். இவர் இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவன உறுப்பினர் மற்றும் அக்கட்சியின் தலைவராக ஒரு முறை பதவிவகித்தார். பெனிட்டோ முசோலினியால் சிறையில் அடைக்கப்பட்டார்.கிராம்ஷி 20 ஆம் நூற்றாண்டின் மிக முக்கிய மார்க்சிய சிந்தனையாளர்களில் ஒருவராவார். கலாச்சார மற்றும் அரசியல் தலைமையை பகுப்பாய்வு செய்துள்ள அவரது எழுத்துக்களில் பண்பாட்டு மேலாதிக்க கோட்பாடுகளை முன் வைக்கின்றார். முதலாளித்துவ சமூகத்தில், பண்பாட்டு மேலாதிக்கத்தின் மூலம் அரசுகள் அதிகாரத்தை எவ்வாறு தக்க வைத்துக் கொள்கின்றன , என்பதை விளக்குகிறார்.[2]
விரைவான உண்மைகள் அண்டோனியோ கிராம்ஷி, பிறப்பு ...
அண்டோனியோ கிராம்ஷி | |
---|---|
![]() அண்டோனியோ கிராம்ஷி, 1916 | |
பிறப்பு | (1891-01-22)22 சனவரி 1891 இத்தாலி |
இறப்பு | 27 ஏப்ரல் 1937(1937-04-27) (அகவை 46) இத்தாலி |
பகுதி | மேற்கத்திய தத்துவம் |
பள்ளி | மார்க்சியம் |
முக்கிய ஆர்வங்கள் | அரசியல்,கருத்தியல், பண்பாடு |
குறிப்பிடத்தக்க எண்ணக்கருக்கள் | மேலாதிக்கம் |
மூடு